மகளை இழந்துவிட்டு கதறி அழுத குடும்பத்திற்கு..கமலஹாசன் செய்த செயல்..குவியும் பாராட்டுகள்..!
தற்போது தமிழகத்தினை சோகத்திலும் அரசியல் கட்சிகள் மீது மக்கள் ஆத்திரத்துடனும் ஆழ்த்தியிருக்கும் சம்பவம் தான் சுபஸ்ரீயின் மரணம்.இதனை மரணம் என கூறி கடந்து செல்வதைவிட கொலை என்று கூட சொல்லலாம். ஒரு விடயத்தால் மக்களுக்கு தீங்கு என தெரிந்தும் அதனை செய்தால் அதனால் மக்கள் பாதிக்கப் பட்டு மரணமடைந்தால் அதனை கொலை என்று கூட சொல்லலாம்.
குரோம்பேட்டை நெமிலிச்சேரி பவானி நகரை சேர்ந்தவர் ரவி. இவரது ஒரே மகள் சுபஸ்ரீ (23). கம்ப்யூட்டர் என்ஜினீயர். நேற்று முன்தினம் வேலை முடிவடைந்து பல்லாவரம் ரேடியல் சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது அங்கு வைக்கப்பட்டிருந்த பேனர் காற்றில் ஆடி இவர் மீது விழுந்துள்ளது. நிலைகுலைந்து தடுமாறி வீதியில் விழவும் பின்னால் வந்த தண்ணி லாரி அவர் மீது ஏறியதால் அவ்விடத்திலேயே மரணமடைந்துள்ளார்.
இதனால் மக்கள் ஆத்திரம் கொண்டதினால் அனைத்து அரசியல் கட்சி தலைமையகங்களும் இனிமேல் பேனர் வைக்க கூடாது என கடுமையான உத்தரவினை தமது கட்சி தொண்டர்களுக்கு பிறப்பித்துள்ளனர்.இந்நிலையில், நடிகர்கள் கமல், விஜய், சூர்யா, சிம்பு மற்றும் சிலரும் தமது ரசிகர்களுக்கு இனிமேல் கட்டவுட், பேனர் அமைக்க வேண்டாம் என அன்பு வேண்டுகோளினை விடுத்துள்ளார்கள்.
இந்த நிலையில் மக்கள் மையத்தின் தலைவரும் பிக் பாஸ் தொகுப்பாளருமான கமலஹாசன் சுபாஸ்ரீ குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது..!