ஆண்களிற்கு சாமர்த்திய சடங்கு ( Puberty Ceremony) கொண்டாட தயாராகும் வெளிநாட்டு தமிழர்கள் – வீடியோ இணைப்பு
பெண் வயதிற்கு வந்துவிட்டால் என்றால் போதும் பெற்றவர்கள் காட்டில் மழை தான், ஆனால் தாய்மாமன் அந்தோ கதி தான். பெண் வயதிற்கு வந்துவிட்டால் ஆரம்ப காலத்த ஆண்களின் முகம் பார்க்காமல் சில சடங்குகள் முடித்து விட்டுவிடுவார்கள். பெண் வயதுக்கு வந்துவிட்டார் என்பதை அவர்கள் அணியும் ஆடைகள் காட்டிக் கொடுத்துவிடும்.
அதன் பின் சிறிது சிறிதாக கொண்டாட்டமாக மாறியது. பெண் வயதுக்கு வந்துவிட்டால் உறவுக்கார ஆண்கள் தவிர்த்து ஊரில் உள்ள பெண்கள் மட்டும் இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும் முறை இருந்தது. தற்போது இது முற்றிலும் மாறி பெருமைக்காக விளையாட ஆரம்பித்து விட்டனர்.
பெரும்பாலும் வெளி நாடுகளில் செய்யும் அட்டகாசங்களுக்கு அளவே இல்லாமல் போய் விட்டது. இந்த நிலையில் பெண்கள் வயதிற்கு வந்தால் மட்டும் கொண்டாடும் உலகம் ஏன் ஆண்களை மட்டும் கொண்டாடுவதில்லை.? பெண்களுக்கு ஏற்படும் அதே ஹார்மோன் மாற்றங்கள் குறித்த வயதின் பின் ஆண்களுக்கும் ஏற்படுகின்றது தானே..?
ஏன் ஆண்களுக்கு மட்டும் கொண்டாடுவதில்லை? இங்கு இளைஞர் ஒருவருக்கு தான் வயதிற்கு வந்துவிட்டதாய் தோன்றுகிறது அதனால் சடங்கு செய்ய வேண்டும் என பிடிவாதம் பிடிக்கிறார். அதன் பின் குறித்த இளைஞருக்கு சடங்கு செய்கிறார்கள்…எப்படி என்பதை அழகான வீடியோவாக வெளியிட்டுள்ளனர். நீங்களே பாருங்கள்..!!