13 வயது சிறுமியை திருமணம் செய்து சீரழித்த 40 வயது காமுகன் – வீடியோ இணைப்பு
எத்தனை நாகரீக மாற்றங்கள் வந்தாலும் இன்றளவும் கிராமங்களில் மாறாமல் இருக்கும் ஒரு விடயம் தான் உறவுகளை கட்டாய திருமணம் செய்து வைப்பது, அல்லது யாரும் இல்லாத நிலையில் மகளை போல் வளர்க்கும் குழந்தைகளை திருமணம் செய்வது.
பெண்கள் இப்போது அனைத்து துறைகளிலும் முன்னேறி விட்டனர் என கூறினாலும் அது நகர்புற பெண்களுக்கே பொருந்துகின்றது கிராமங்களில் இருக்கும் சிலர் இப்போது தான் வெளியே வர ஆரம்பித்துள்ளனர். அப்படி தனக்கு நடந்த ஒரு கொடுமையை நடிகை குஷ்பு நடத்திய நிஜங்கள் நிகழ்ச்சிக்கு சிறுமி ஒருவர் எடுத்து வந்துள்ளார்.
17 வயதான சிறுமிக்கு 2.1/2 மற்றும் 10 மாதத்தில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். தாய் தந்தையை இழந்து தாத்தாவுடன் வளர்ந்து வந்த சிறுமியை தாத்தா இறக்கும் முன் ஒருவரிடம் வளர்க்க கொடுக்கிறார். தாய் தந்தையுடன் வாழும் குறித்த நபருக்கு வயது 40. சிறுமிக்கு 13. பெற்றோரின் முன்னிலையில் சிறுமிக்கு தாலி கட்டும் நபர் கொடுமை செய்கிறார்.
இரண்டு குழந்தைகள் வரை சிறுமி அத்தனை கொடுமைகளையும் தாக்கிக் கொண்டு வளர்கிறார். ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்து அயலவரின் உதவியுடன் நிஜங்கள் நிகழ்ச்சிக்கு வருகிறார். அதன் பின் என்ன நடக்கிறது !? குறித்த பெண்ணுக்கு நியாயம் கிடைத்ததா.? இந்த வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..!!