பூட்டிய வீட்டிற்குள் சிறைப்பட்டு இருக்கும் கனகா. சூழ்ந்திருக்கும் மர்மம் இது தானாம்..!
நடிகை கனகா என்றதுமே ஞாபத்திற்கு வருவது கரகாட்டக்காரன் திரைப்படம் தான். பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கனகாவை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது கரகாட்டக்காரன் திரைப்படம் தான். பல நடிகைகளின் வாழ்க்கை போல் தான் இவரது வாழ்க்கையும் அமைந்தது.
அந்த காலகட்டத்தில் அதிக பட வாய்ப்புகள் உள்ள நடிகை என்ற பெயரும் கனகாவிற்கே சொந்தம். அழகு திறமை நடிப்பு இவை மூன்றையும் கொண்டு தமிழ்,மலையாளம், தெலுங்கு, என மூன்று மொழிகளிலும் ஒரு ரவுண்ட் வந்தார். திடீரென காணமல் போனார்.
எங்கே என தேடிய போது தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்ததாகவும் அவர் கனகாவும் ஒட்டுமொத்த சொத்துகளையும் ஏமாற்றி எடுத்துச் சென்றுவிட்டதாகவும் கனகா மன நலம் பாதிக்கப் பட்டு இருப்பதாகவும் செய்திகள் கசிந்தன. அதன் பிறகு கனகா இறந்து விட்டதாக செய்திகள் வந்தது.
அது வரை வெளியே வராத கனகா முதல் முறை மீடியா முன் வந்து தான் உயிரோடு இருப்பதாகவும் தன்னுடைய சொத்துகளை அபகரித்துக் கொள்ள தந்தை தன்னை இறந்துவிட்டதாக கூறி நாடகம் ஆடியுள்ளார் எனவும் குறிப்பிட்டார். அதன் பின் மீண்டும் காணமல் போய் மீண்டும் சினிமா சங்கத் தேர்தல் ஒன்றில் வாக்களிக்க வந்தார்.
தற்போது மீண்டும் வெளியே வருவதில்லை. தற்போது கனகா இருப்பது தன்னுடைய தாயான நடிகை தேவிகா சம்பாதித்த சொத்தில் தான். ஏராளமான பணத்திற்கு சொந்த காரியான தேவிகாவின் ஒரே மகளான கனகா தன்னுடைய சொந்துகளை இழந்த நிலையில் தன்னுடைய தாயின் சொத்துக்களையும் யாரேனும் பறித்துவிடுவார்கள் என்ற எண்ணத்தில் பூட்டிய வீட்டிற்குள் வாழ்ந்து வருகின்றார் என தற்போது தகவல்கள் கசிய தொடங்கியுள்ளது.
வீட்டை விட்டு வெளியே செல்லும் கனகா யாருடனும் பேசுவதே இல்லையாம். பொருட்களை வாங்கி வந்து வீட்டிற்குள் சென்று கதவை பூட்டிக் கொள்வாராம். பல நடிகைகள் மரணத்தின் பின் தான் மர்மமாக இருப்பார்கள் இவர் உயிரோடு இருக்கும் போதே இவரது வாழ்க்கை மர்மம் நிறைந்ததாக இருக்கிறது.
ஒரு வேளை இவரது முதல் ஏமாற்றம் இவரது மனதை இப்படி மாற்றி இருக்கக் கூடும் என பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில் கனகா வாய் திறந்தால் மட்டுமே உண்மை அறிய முடியும் என இன்னும் சிலர் கூறி வருகின்றனர்..!
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”