இந்தியாவில் மூன்று குழந்தைக்கு மேல் பெற்றுக்கொண்டால் சிறைத் தண்டனை கொடுங்கள்.! பிரபல நடிகை அதிரடி.!!
இந்தியாவில் மூன்று பிள்ளைகளுக்கு மேல் பெற்றால் சிறை தண்டனை அல்லது மிகப் பெரிய தொகையை தண்டனை பணமாக அறிவிக்க வேண்டும் என நடிகை கங்கனா கூறியிருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹிந்தி , தமிழ் உட்பட பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை கங்கனா ரணவத்.
என்ன நடந்தாலும் அரசுக்கு சார்பாக பேசிக்கொண்டிருக்கும் இவர் அண்மையில் விவசாயிகளின் போராட்டத்தை தீவிர வாதிகளின் போராட்டம் என்றார். இந்த நிலையில் தற்போது இந்தியாவில் குழந்தை பெற்றுக் கொள்வதை கட்டுப் படுத்த வேண்டும் என கூறியுள்ளார். இதனை கேலி செய்யும் விதமாக பிரபல நகைச்சுவை நடிகர் ஒருவர் கங்கனாவின் தந்தை அவருக்கு ஒரு சகோதரியும் சகோதரனும் மட்டுமே கொடுத்துள்ளார் என கிண்டலாக பதிவிட்டார்.
இந்த பதிவுக்கு பதில் அளித்துள்ள கங்கனா உங்களை போன்றவர்களால் தான் நாடு இப்படி இருக்கிறது. நல்ல விடயம் சொன்னால் கேட்டுக் கொள்ள வேண்டும். என் தாத்தாவிற்கு 8 பிள்ளைகள். அவர்கள் காட்டு வாழ்க்கை வாழ்ந்தார்கள். பெரும்பாலும் அவர்களுக்கு அனைத்தும் இலவசமாக கிடைத்தது. சனத்தொகை இந்த அளவில் இருக்கவில்லை அதனால் பிள்ளைகளை பெற்று சனத்தொகையை அதிகரித்தார்கள்.
அவர் அதிகரித்தது போதாது என்று நாமும் அதிகரித்து தற்போது சனத்தொகையில் இரண்டாவது இடத்தில் இருக்கிறோம். சீனாவில் தற்போது குழந்தை பெற்றுக்கொள்ள கட்டுப் பாடுகள் விதிக்கப் பட்டுள்ளது. அதனை நாமும் பின் பற்றினால் நாடு சீக்கிரம் கடனில் இருந்து மீண்டு விடும். அதிக பிள்ளைகளை பெற்றுக் கொள்வதால் படித்து, மருத்துவ என் பல இலவசங்கள் வீணாகிறது.
வைத்தியசாலையில் கட்டில் இல்லை, ஆக்சிஜன் இல்லை, வீட்டில் உணவு இல்லை, படித்தவர்களுக்கு வேலை இல்லை என்ற கதை அப்போது இருக்காது.அதனால் தான் சொல்கிறேன் ஆசைக்கு ஒரு ஆண் குழந்தைதும் இரண்டு பெண் குழந்தையும் இருந்தாலே போதும், இதனால் நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லது என தெரிவித்துள்ளார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.!!