கண்ணீரில் கரைந்து போன ராமராஜனின் நிஜ வாழ்க்கை..! பிரபல நடிகராக இருந்த இவருக்கே இப்படியா..!?
தமிழ் திரையுலகில் இன்று வரை மறக்கப் படாத நடிகர்களில் முதலிடத்தில் இருப்பவர் நடிகர் ராமராஜன். இவர் என்ன ரஜினி கமலஹாசன் ஆஹ் மறக்காமல் இருப்பதற்கு என கேட்டு விடாதீர்கள் காரணம் இவரும் அப்படி இருந்தவர் தான். அன்று இவரின் ஸ்டைலில் ஆடை அணிந்து, தலைமுடி வெட்டிக் கொண்டு பலர் இருந்தார்கள். இவர் நடித்த அனைத்து திரைப்படங்களிலும் கிராம மணம் இருக்கும்.
இவரது நடிப்பில் வெளியாகிய பல படங்கள் 100 நாட்களை கடந்து ஓடியது. குறிப்பாக “எங்க ஊரு பாட்டுக் காரன்” கரகாட்டக்காரன், வில்லுபாட்டுக் காரன்,கோபுர தீபம் என தொடங்கி இன்றளவும் மனதை விட்டு விலகாத பல படங்கள், பாடல்கள் இவர் கொடுத்தது.
ராமராஜன் கலர் என இன்று பலர் கேலி கிண்டல் செய்யும் ஆடைகள் தான் அன்றைய இளைஞர்களின் ஸ்டைல். இப்படி அவரைப் பற்றி சொல்லிக் கொண்டே செல்லலாம். இவர் அன்றைய ஹீரோயின்களில் உச்சத்தில் இருந்த நடிகை நளினி அவர்களை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
திரையில் நல்ல இடத்தில் இருக்கும் போது இவருக்கு அரசியல் ஆசை வந்தது. இவர் மிகப் பெரிய எம் ஜி ஆர் ரசிகர். அதனால் அவரது கட்சியில் இணைந்தார். திரைதுறை அவருக்கு குட் பாய் சொல்லி அனுப்பி வைத்துவிட்டது. அதன் பின் அரசியலில் முழு நேரமாக ஈடுபட்ட ராமராஜன் மனைவி நளினியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்தனர்.
அதன் பின் முழு நேர அரசியல் வாழ்க்கையில் இருந்தார். கட்சி பிரச்சார கூட்டத்திற்காக சென்ற போது பாரிய விபத்தில் சிக்கினார். அந்த நேரத்தில் கையில் பணமின்றி தவித்த ராமராஜானுக்கு அத்தனை மருத்துவ செலவுகளையும் செல்வி ஜெயலலிதா அவர்களே கொடுத்தார்.இந்த நிலையில் காதல் கணவன் வலியில் தவித்தால் விடுவாரா அதனால் மீண்டும் கணவருடன் இணைந்துகொண்டார்.
ஒரே மொபைல் Application இல், உங்கள் விருப்பத்திற்கேற்ப கேட்டு மகிழ 45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா? இப்போதே டவுண்ட்லோட் செய்யுங்கள், ஒரு தடவை கேட்டுப் பாருங்கள், நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும்!!
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.