சினிமாவில் இருந்து வெளியேறும் நடிகை ராதாவின் மகள் நடிகை கார்த்திகா.!! இனி இந்த தொழில் தான் செய்யப் போகிறாராம்.!!
தமிழ் சினிமாவில் தற்போது நடிக நடிகைகளுக்கு வாய்ப்புகள் குறைந்து செல்வதால் சினிமாவிற்கு பலர் குட் Bபாய் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். புது நடிகைகளின் வரவால் 90s நடிகைகளில் பலர் காணாமலே போய் விட்டனர். அவர்களை அடுத்து ஒரு சில 2k நடிகைகளும் சினிமாவை விட்டு வெளியே செல்ல ஆரம்பித்துள்ளனர்.
அந்த வகையில் நடிகை ராதாவின் மகளும் நடிகையுமான கார்த்திகாவும் சினிமாவை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளார். கார்த்திகா ஒரு சில திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பேசப் பட்டார் அதன் பின் எவ்வளவு முயன்றும் திரைப்பட வாய்ப்புகள் வரவில்லை.
அதனால் சினிமாவை விட்டு வெளியேறும் கார்த்திகா தனது தந்தையின் 5 நட்சத்திர ஹோட்டலை நடத்தப் போவதாக தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் திறமைக்கு வாய்ப்பு கிடையாது அதனால் வெளியேறுகிறேன் என கார்த்திகா மேலும் தெரிவித்துள்ளார்.,!