பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற முதல் நாளே பொய் சொல்லி ரசிகர்களிடம் மாட்டிக் கொண்ட சர்ச்சை நடிகை கஸ்தூரி. தேவையா இது.??
பிக் பாஸ் வீட்டிற்குள் wildcard வரவாக இன்று கஸ்தூரி வந்தது ஏற்கனவே நாம் பதிவிட்டு விட்டோம். ஆனால் கஸ்தூரி வீட்டிற்குள் வருவாரா அல்லது வேறு யாராவது வருவார்களா என்ற சந்தேகம் பலரிடம் இருந்தது. இதற்கு காரணம் கஸ்தூரி தான்.
!Advert!
பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வீர்களா என கஸ்தூரியிடம் கேட்டபோது போக மாட்டேன் என உறுதியாக கூறினார். பின் கஸ்தூரி வீட்டிற்குள் செல்கிறார் என்று வாட்சப் சாட் ஸ்க்ரீன் சாட் போடப்பட்டது. அதனால் கோபப் பட்ட கஸ்தூரி பிக் பாஸ் வீட்டிற்குள் நான் செல்லப் போவதில்லை.
உறுதி இல்லாத செய்திகளை போட வேண்டாம் என கூறினார். ஆனால் இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துவிட்டார். இதனால் கஸ்தூரியே பொய்க்கு மேல் பொய் சொல்கிறார். அப்படி இருக்கையில் பிக் பாஸ் வீட்டில் பொய் சொல்பவர்களை எப்படி சமாளிப்பார் என கேட்டுள்ளார்கள்.
!Advert!
இந்த நிலையில் இறுதி நிமிடம் வரை வீட்டிற்குள் போகும் எண்ணத்தில் இருக்கவில்லை என்றும் அதன் பின் கஸ்தூரிக்கு பேசப்பட்ட தொகையைவிட விஜய் டிவி அதிகமாக கொடுத்ததால் வீட்டிற்குள் சென்றுள்ளார் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது..!!
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.
போன வாரம் கமல் சொன்னாரே, கீரிக்கும் பாம்புக்கும் சண்டையின்னு…. அதே மாதிரி கஸ்தூரி பிக் பாஸ் போறாங்கன்னு சொல்லிக்கிட்டேதான் இருக்காங்க. எவ்வளவுதான் மறுக்கமுடியும் ? இதுக்கு விதம் விதமா ‘ஆதாரம்’ வேற . ஊர்ஜிதப்படுத்தப்பட்ட செய்திகளை மட்டும் வெளியிட்டால் யாவரும் நலம்.
— Kasturi Shankar (@KasthuriShankar) August 1, 2019