முன்னாள் குற்றவாளிகள், சமுதாயத்தில் ஒன்றிணைந்து வாழ புதிய திட்டம் ஒன்று அறிமுகம்..!!
சிங்கப்பூரில் முன்னாள் குற்றவாளிகளுக்கு ஒரு மறுவாழ்வு அளித்து மக்களோடு மக்களாக சமுதாயத்தில் ஒன்றிணைந்து வாழும் புதிய ஒரு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திடடத்தில் SCORE அமைப்பு 5,300 முதலாளிகளுடன் இணைந்து பயிற்சிகளை வழங்கவும், வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளது.
!Advert!
இந்த அமைப்பின் புதிய செயற்பாட்டால் இனி இது போன்ற குற்றங்கள் இடம்பெறாமல் முன்னாள் குற்றவாளிகள் சமுதாயத்தில் ஒன்றிணைந்து வாழவும் ஒரு நல்ல உறவை ஏற்படுத்தவுள்ளது. கடந்த ஆண்டு குற்றம் புரிந்த 2,300க்கும் அதிகமானோர் உதவிக்காக இந்த SCORE அமைப்பை நாடியுள்ளனர்.
!Advert!
இந்த திட்டத்தில் 96 பேர்கள் சிறையில் இருந்து வெளியாவதற்கு முன்பே வேலை உறுதி செய்யப்பட்டது.உதாரணமாக, SCORE அமைப்பின் The Hope Cafe, சமையல் கலையில் சான்றிதழ் பெறுவது, உணவு பானக் கடைகளை இயக்குவது ஆகியவற்றில் குற்றவாளிகளுக்குப் பயிற்சிகளை வழங்குகிறது.
!Advert!
SCORE அமைப்பின் முயற்சிகளைப் பார்வையிட்ட சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப், முன்னாள் குற்றவாளிகளுக்கு சமூகத்தில் ஆதரவு வழங்குவது மிக முக்கியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.