சிங்கப்பூரில் இன்று இடம்பெறவுள்ள தேசிய தின அணிவகுப்பு..!!
சிங்கப்பூர் பாடாங்கில் இன்று இடம்பெறவுள்ள தேசிய தின அணிவகுப்பையொட்டி அங்குள்ள சாலையோரங்கள் மூடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின் பாதுகாப்பு பணியில் சிங்கப்பூர் பொலிஸார் தீவிரமாக செயற்பாடுகள் ஈடுபட்டுள்ளனர்.
Suntec Cityக்கும், மரீனா சதுக்கத்துக்கும் இடையில் போக்குவரத்து தாமதமாகலாம். வீதிகளில் போக்குவரத்து பணியில் ஈடுபடும் பேருந்துகள் திருப்பி அனுப்பப்படும் என்றும் பொலிஸார் வாகனங்களும் மற்றும் அவசரகால உதவி வாகனங்களும் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.
!Advert!
பாதிக்கப்பட்ட வட்டாரங்களில், வாகனமோட்டிகளுக்கு உதவ போக்குவரத்து வழிகாட்டிகள் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். இன்றைய நாள் முழுவதும் பாடாங்கும், அதைச் சுற்றியுள்ள வட்டாரமும் சிறப்பு நிகழ்ச்சிப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராஃபிள்ஸ் பிளேஸ், மரீனா பே, புகிஸ் போன்றவை இதில் அடங்கும்.
ஒலிபெருக்கிகள், ஒளிச் சமிக்ஞைக் கருவிகள், ஆபத்தான பொருள்கள், வண்ணம் தெளிக்கும் சாதனங்கள் போன்றவை பாவிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. உரிய அனுமதியின்றி ஆளில்லா வானூர்திகளை பறக்க விட கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
!Advert!
சிறப்பு நிகழ்ச்சிப் பகுதிக்குள் அமைந்திருக்கும் சிறப்பு வட்டாரத்தில் நுழையும் நபர்களையும், வாகனங்களையும் அதிகாரிகள் போதித்த பின்னர் உள்ள செல்ல விடப்படும்.
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.