சிங்கப்பூரில் இடம்பெற்ற தேசிய தினக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறிய பிரதமர் லீ சியன் லூங்…!!
சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் நேற்று இடம்பெற்ற தேசிய தினக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட வெளிநாட்டுத் தலைவர்களுக்கு தனது இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துள்ளார். இந்த நன்றியை இன்று பிரதமர் அலுவலகம் வைத்து தெரிவித்துள்ளார்.
!Advert!
மலேசியா, இந்தோனேசியா, புருணை போன்ற அண்டை நாடுகளின் தலைவர்களும் அவர்கள் தங்களின் மனைவிகளுடன் சிங்கப்பூரின் 54-ஆவது தேசிய தினக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டுள்ளனர்.
புருணை மன்னர், ஹசனல் போல்கியா, இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோ, மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது ஆகியோர், சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் அவர்களின் அழைப்பை ஏற்று, நேற்றைய கொண்டாட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
!Advert!
சிங்கப்பூரின் இருநூறாம் ஆண்டு நிறைவை ஒட்டி நேற்றைய தினம் நடைபெற்ற இந்த கொண்டாட்டத்தில் அவர்கள் கலந்துகொண்டது, சிங்கப்பூருக்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் இடையில் உள்ள வரலாற்றுத் தொடர்புகளை நட்பார்ந்த உறவுமுறைகளையும் மறு சீர் உறுதிப்படுத்தியதாக பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.