கம்பஹா பூகொட பகுதியில் கத்தியால் குத்தி ஒருவர் கொலை…!!
கம்பஹா பூகொட பகுதியில் நபர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் மண்டாவில மஹிந்த வித்தியாலயத்திற்கு அருகே இடம்பெற்றுள்ளது. இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய் தகராறு காரணத்தால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
!Advert!
தாக்குதலில் போது பலத்த காயமடைந்த நபர் கம்பஹா அரச மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். மேலும் இந்த சம்பவத்தில் பூகொட பகுதியில் சேர்ந்த 50 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
!Advert!
மேலும் கத்திக்குத்து சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளதுடன் பூகொட பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.