Wildcard வரவாக பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த கஸ்தூரி..சாக்ஷியிடம் கேட்ட முதல் கேள்வி…!!
பிக் பாஸ் சீசன் 50 நாட்களை நெருங்கிவிட்ட நிலையில் இன்று திடீர் wildcard வரவு நிகழ்ந்தது. போட்டியாளர்களை வெளியே அனுப்பிவிட்டு வீட்டிற்குள் கிப்ட் பார்சல் இருப்பதாகவும் எடுத்துக் கொள்ளும்படியும் கூறப்பட்டது. வீட்டிற்குள் சென்று கிப்ட் பார்சலை பிரித்தவர்கள் ஷாக் ஆனார்கள்.
!Advert!
காரணம் பார்சலுக்குள் கஸ்தூரி. கமலஹாசன் இருக்கும் நாளில் தான் பிக் பாஸ் வீட்டிற்குள் வருவேன் என கூறியிருந்த கஸ்தூரி இன்று திடீரென வந்துவிட யாரும் எதிர்பார்க்கவில்லை. அபிராபி உடனடியாக கட்டிப் பிடித்து வரவேற்க லொஸ்லியா யார் என்றே தெரியாமல் வரவேற்றார் என்று தான் சொல்லவேண்டும்.
பிக் பாஸ் வீட்டில் இருந்து வனிதா வெளியேறிய பின் வீடி யாரும் இல்லாத வீடு போல் இருந்தது. நேற்றைய நிகழ்ச்சி சந்தோசமாக முடிந்தது. பிக் பாஸ் ஆரம்பித்ததில் இருந்து நேற்றைய நிகழ்ச்சி மட்டுமே சண்டை இன்றி சமாதானமாக முடிந்தது என்று சொல்லவேண்டும்.
!Advert!
இப்படி மகிழ்ச்சியாக இருந்த குடும்பத்தில் மண்ணை போடுவது போல் கஸ்தூரியின் வரவு இருந்தது. இதில் கஸ்தூரி வந்ததும் அவரது முதல் கேள்வி சாக்ஷியிடம் தான் இருந்தது. அதில் இப்ப காதல் வலி எல்லாம் மறந்து போச்சா என கஸ்தூரி கேட்டதாக ஹாட் ஸ்டார் பக்க தகவலகள் கூறுகின்றது. இன்று இருக்கு சம்பவம் இருக்கு. இனி வனிதாவின் கதாபாத்திரத்தில் கஸ்தூரி..!!
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.
இந்தா இருக்கு கிஃப்டு!#Day46 #Promo1 #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #BiggBossTamil #VijayTelevision pic.twitter.com/0xg0VZtZ0M
— Vijay Television (@vijaytelevision) August 8, 2019