இம்முறை பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவது இவர் தான்..!!
பிக் பாஸ் வீட்டில் அடுத்த வார கேப்டனாக சேரன் தேர்வாகியுள்ளார். சேரன், சாண்டி, லொஸ்லியா ஆகியோர் கேப்டன் டாஸ்க்குக்கு தேர்வாகி இருந்த நிலையில் இவர்கள் மூவரின் பெயர்களும் பல பேப்பர் துண்டுகளில் எழுதி ஒரு கண்ணாடி bபெளலில் போடப் பட்டது. யாருடைய பெயர் அதிக முறை போட்டியாளர்களால் எடுக்கப் படுகிறதோ அவரே அடுத்த வார கேப்டன் என கூறப் பட்டது. இந்த நிலையில் சேரனின் பெயர் பலமுறை எடுக்கப் பட்டது. அதில் லொஸ்லியாவின் பெயர் ஒரே ஒரு முறை அதுவும் கவினால் எடுக்கப் பட்டது. இதனால் இம்முறை கேப்டனாக சேரன் தேர்வு செய்யப் பட்டார். இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து இம்முறை யார் வெளியேறுவார்கள் என்ற கேள்வி மக்களிடம் வந்துள்ளது. இதற்கான பதிலும் கிடைத்துவிட்டது. நாளைய நிகழ்ச்சியில் தர்சன் மற்றும் சாண்டி முதலில் மக்களால் காப்பாற்றப் படுகிறார். இதனை தொடர்ந்து யார் வெளியேறுவார் என்ற போட்டி கஸ்தூரி மற்றும் சேரன் இடையே இடம்பெறுகிறது.
இதன் போது சேரன் காப்பாற்றப் படுகிறார். கஸ்தூரி வெளியேற்றப் படுகிறார். இதனால் அடுத்த வாரம் சேரனை யாரும் நாமினேட் பண்ண முடியாது, அதனால் வனிதா கண்டிப்பாக நாமினேஷனில் வருவார் என எதிர்பார்க்கப் படுகிறது. அடுத்ததாக ஐந்து பேர் டீம் உடையலாம், அல்லது அனைவரின் பார்வையும் செரின் மீது போகலாம். பொறுத்திருந்து பார்ப்போம்..!!
45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?
Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.