லொஸ்லியா கவின் இதுவரை இணைந்து புகைப்படம் எடுக்காததற்கு இவர் செய்த சதி தான் காரணம்..!வெளியாகி உள்ள உண்மை தகவல்..!!
என்ன தான் திட்டி தீர்த்தாலும் பிக் பாஸ் வீட்டிற்குள் ரசிக்க கூடியதாக இருந்த ஒரே காதல் ஜோடி லொஸ்லியா மற்றும் கவின் தான். இந்த காதல் ஜோடி தான் கண்ணுக்கு அழகாக இருந்ததுடன் காதல் என்ற பெயரில் காம லீலைகள் செய்யாமல் இருந்தது. அதனாலோ என்னவோ இவர்களை அனைவருக்கும் பிடித்துப் போனது. இந்த ஜோடி காதலில் வெற்றிபெற வேண்டும் என அனைவரும் கூறி வந்தனர்.
ஆனால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் இருவரும் ஒன்று சேர்ந்து ஒரு புகைப்படம் கூட எடுத்துக் கொள்ளவில்லை. தற்போது இதற்கான காரணம் வெளியாகி உள்ளது. வெளியே சென்றதுமே கவினை மறக்கும் படியும் பேச கூடாது எனவும் லொஸ்லியாவின் தாயார் கட்டளை இட்டுள்ளார். அதற்கு சம்மதம் தெரிவித்த லொஸ்லியா அபிராமியுடன் இணைந்து தொலைபேசியில் கவினுடன் பேசியுள்ளார்.
இன்னும் ஒரு மாதத்திற்குள் அம்மாவின் அனுமதி வாங்கிவிடுவேன் என கவினுக்கு லொஸ்லியா உறுதியளித்துள்ளார். லொஸ்லியாவை தனியாக எங்கும் அனுப்பாத அம்மா லொஸ்லியா செல்லும் இடங்களுக்கும் அவருடன் சென்றுள்ளார். அதனால் லொஸ்லியா கவினுக்கு புகைப்படம் எடுக்கும் வாய்ப்பு இருக்கவில்லை.
இந்த நிலையில் பைனல் வந்த இருவரும் அருகருகே அமர்ந்துகொண்டனர். லொஸ்லியாவின் தாயாரால் அதனை தடுக்க முடியவில்லை. அம்மா அப்பாவின் அனுமதியுடன் திருமணம் செய்வோம் என இருவரும் முடிவெடுத்துள்ள நிலையில் கவினின் வீட்டில் பச்சைக் கொடி காட்டிவிட்டனராம். லொஸ்லியாவின் தாய் தவிர்த்து மற்றவர்களுக்கு கவினை பிடிக்குமாம்.
இதனால் லொஸ்லியா கவின் சீக்கிரம் நிஜ வாழ்வில் இணைவார்கள் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் லொஸ்லியாவின் தாய் மற்றும் சகோதரிகள் கலந்துகொண்டுள்ள நிலையில் நிகழ்ச்சி முடிந்ததும் இலங்கை செல்வார்கள் என்று கூறப்படுகின்றது..!!