” நான் பணத்திற்காக வீட்டை விட்டு செல்லவில்லை” கவினின் பேச்சால் கவலையில் ரசிகர்கள்..!!
ஆரம்பத்தில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என ஆரம்பித்த பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது சோகமாக மாறி உள்ளது. 16 போட்டியாளர்கள், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம் ஆனால் மகிழ்ச்சியாக இருந்தனர். இரண்டாம் வாரமே சண்டை ஆரம்பிக்க ஒவ்வொருவராக வெளியேற் ஆரம்பித்தார்கள்.
16 பேர் 7 பேரான போது யார் போகப் போகிறார்கள் என்ற பதற்றம் ரசிகர்களிடம் இருந்தது. அதன் போது சேரன் வெளியேற்றப் பட்டார். அதனை தொடர்ந்து 5 லட்சம் பணத்துடன் கவின் வெளியேறினார். கவினுக்கான பணத் தேவை இருக்கிறது என அனைவருக்கு தெரிந்திருந்ததால் அனைவரும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர்.
ஆனால் இன்று கவின் மேடையில் நான் எப்போதோ வீட்டை விட்டு சென்றிருப்பேன், நான் சென்றால் லியா தனியாகி விடுவார் அத்துடன் அது பற்றி யோசித்து விளையாடாமல் இருப்பார். இதற்காக தான் பொறுமையாக இருந்தேன்.
எனக்கு பைனல் செல்லும் ஆசை இல்லை, வீட்டிற்குள் இருந்தது லியாக்காக தான். என கூறினார். வெளியே வந்த கவின் இன்று மேடையில் பேசும் போது இதனை கூறியிருந்தார்..!!