“நான் இவரை காதலிக்கிறேன்” கவினுடனான காதல் பிரிவின் பின் முதல் முதல் தன் காதல் பற்றி பேசிய சாக்ஷி..! சாக்ஷியின் காதல் யார் மீது தெரியுமா..இத படியுங்கள்..!!
பிக் பாஸ் வீட்டில் அதிக சர்ச்சைகளில் சிக்கியவர் நடிகை சாக்ஷி அகர்வால். வீட்டிற்குள் வந்து ஒரு வாரத்திலேயே கவினுடன் காதலில் விழுந்த சாக்ஷி பின் அதில் இருந்து வெளியே வந்தார். ஆனால் அதனை அவ்வளவு எளிதில் விட்டு விடவில்லை, தினமும் கவினுடன் சண்டை போட்டதுடன் அழுது வடித்தார். அத்துடன் மீரா சொல்லாததை சொன்னதாக கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இதனால் ரசிகர்கள் மத்தியில் சாக்ஷி மீது வெறுப்பு தோன்ற ஆரம்பித்தது, இதனால் சாக்ஷி வெளியேற்றப் பட்டார். வெளியே வந்த பின் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க நடிக்க ஆரம்பித்தார். மற்றைய நடிகைகளை விட சாக்ஷியின் கை வசம் நிறைய திரைப்படங்கள் தற்போது உள்ளது.
இந்த நிலையில் அண்மையில் பேட்டி கொடுத்துள்ள சாக்ஷி தனது வாழ் நாள் கிரஸ் பற்றி பேசியுள்ளார். அதில் மற்ற எந்த நடிகர் மீதும் தோன்றாத ஒரு காதல் அஜித் சார் மீது உள்ளது. சாலினி அவர்களை அஜித் சார் திருமணம் செய்திருக்கா விட்டால் நிச்சயம் இப்போ கூட அவரிடம் என் காதலை சொல்ல தயாராக இருக்கிறேன்.
எல்லோருக்கும் அண்ணா தம்பி கூட நல்லவர்களாக கிடைத்து விடுவார்கள் ஆனால் கணவன் என்றால் கிடைப்பது கடினம். அஜித் சார் நல்ல கணவர், நல்ல அப்பா, நல்ல மனிதர், நல்ல நடிகர், எல்லா பெண்களும் அஜித் சார் போல் தான் கணவர் வேண்டும் என நினைப்பார்கள் நானும் தான் என தெரிவித்துள்ளார்..!!