லலிதா ஜூவல்லரி கொள்ளையன் முருகனுடன் தொடர்பில் இருந்தது இந்த நடிகை தானாம்..
அக்டோபர் 2ம் திகதி திருச்சியில் லலிதா ஜூவல்லரியை சுவரில் துளையிட்டு கொள்ளையர்கள் கொள்ளையிட்டு சென்றனர். இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக சுரேஷ் மற்றும் மணிகண்டன் கைது செய்யப் பட்டிருந்தனர். இதில் முக்கிய குற்றவாளியான முருகன் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதனை தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளில் பல திடுக்கிடும் விடயங்கள் வெளியாகி உள்ளது.
இது வரை கொள்ளையர்கள் திருடிய நகைகளில் அரைவாசி கைப்பற்றப்பட்ட நிலையில் பொலீஸார் தொடர்ந்தும் தேடுதலை நடத்தி வருகின்றனர். இதில் பல சினிமா பிரபலங்களும் உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. கொள்ளையனான முருகனுக்கு சினிமா தான் பிடித்த விடயம் என்பதால் சினிமா நடிகைகளுடன் உல்லாசம் காண்பதற்காகவே பல இடங்களில் கொள்ளை அடித்துள்ளதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
அத்துடன் நகை மற்றும் பணத்திற்கு ஆசைப் பட்ட “குளிர்ச்சிக்கு” பேர் போன பிரபல நடிகை முருகனுக்கு உதவியாக இருக்கிறாராம். குரூப்பாக சேர்த்து கொள்ளை அடிதுவிட்டு தனக்குரிய பங்கை முருகன் குறித்த நடிகையிடம் கொடுத்து விடுவாரார்,
அதன் பணத்தை மாற்றுவது, நகை விற்பது உட்பட அனைத்தையும் அந்த நடிகையே
செய்துவிடுவாராம். இந்த தகவல்கள் தற்போது வெளியாகி வருகிறது. பொலீஸ் விசாரணையில் இன்னும் என்ன என்னவெல்லாம் வரம் போகிறதோ என முருகனிடம் பணம் பெற்றோர் பயத்தில் உள்ளனர் என்பதும் உண்மை தானேங்க?