லிப்டில் லட்சுமி ராமகிருஷ்ணனின் மகளுக்கு நடந்த பாலியல் தொல்லை..! இப்படியும் மிருகங்கள்…!!
பாலியல் தொல்லைகள் தற்போது அளவு கடந்து சென்றுகொண்டிருக்கின்றது. பெண் குழந்தைகளை பெற்றவர்கள் மடியில் நெருப்பை கட்டிக் கொண்டு இருக்கின்றனர். எந்த நேரம் என்ன நடக்கும் என்பதால் பயத்தில் வாழும் சூழ்நிலை தான். இதற்கு காரணம் எம் நாடுகளில் இதற்கு சரியான தண்டனை கொடுக்காதது தான். இந்த நிலை தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
இந்த நிலையில் நடிகையையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் பரபரப்பு பேட்டி ஒன்றை வழங்கியுள்ளார். அதில் பாலியல் தொல்லையை பெண் குழந்தைகள் சிறு வயதில் இருந்தே அனுபவித்து வருகின்றனர். அணைவரும் அதனை வெளிப்படுத்துவது இல்லை , எனது சிறுவயதில் தந்தை வழி உறவினர் ஒருவர் என்முன் சில தகாத செயற்பாடுகளை செய்து காட்டுவார்.
ஏன் அப்படி நடந்துகொள்கிறார் என்று கூட தெரியாத வயது அது. பெரியவளான பின் தான் அது மோசமான செயற்பாடு என தெரிந்துகொண்டேன் என தெரிவித்துள்ளதுடன் அது ஆதி காலம் என நினைக்காதீர்கள். இது போன்ற ஒரு சம்பவம் என் மகளுக்கும் நடந்தது. என் மகள் லிப்டில் செல்லும் போது அவளுடன் வந்த நபர் ஒருவர் பேண்டை கழட்டி மகள் முன் நின்றுள்ளார்.
இதனால் பயந்துபோன மகள் லிப்ட் நின்ற போது கதறிகொண்டு வெளியே ஓடியுள்ளார். அருகில் இருந்தவர்களிடம் மகள் நடந்ததை கூறிய போது குறித்த நபர் தப்பிவிட்டார். சிசி டிவியிலும் குறித்த நபரின் முகம் தெரியாததால் விட்டுவிட்டுடோம். இது போன்ற சம்பவங்கள் எல்லா இடத்திலும் நடந்துகொண்டு தான் இருக்கின்றது. பெண்கள் தனியாக வெளியே செல்லும் நிலை வர வேண்டும் என கூறியுள்ளார்..!!