பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் லொஸ்லியாவின் உண்மை முகம் வேறு… உண்மையை போட்டுடைத்த லொஸ்லியாவின் தோழி..!!
இலங்கையின் பிரபல சேனலில் செய்தி வாசிப்பாளரான லொஸ்லியா இம்முறை பிக் பாஸ் சீசன் 3ல் கலந்துகொண்டுள்ளார். பிக் பாஸ் வீட்டில் அமைதியாக இருக்கும் லொஸ்லியா யார் என்ன சொன்னாலும் பொருட்படுத்தாமல் இருக்கிறார். இதனால் பலருக்கு அவரை பிடித்து போய் இருக்கிறது. அண்மையில் நடிகர் சதீஷ் எங்கள் ஆதரவு லொஸ்லியாவிற்கு என கூறியிருந்தார். அதே போல் காஜல் பசுபதி அவர்களும் லொஸ்லியா மட்டுமே தற்போது வரை சுட்டித் தனங்களுடன் மனதை கவர்கிறார் என கூறி இருந்தார். அதே போல் நடிகர் தாடி பாலாஜி தனது கருத்தை பதிவிட்டார். அதில் வீட்டில் இருக்கும் வனிதா மற்றும் ஷெரின் இருவரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் விஜய் டிவிக்கும் அவமானம்.
இவர்கள் இருவரும் பிக் பாஸ் வீட்டில் இல்லாவிட்டால் அனைவரும் ஒற்றுமையாக இருப்பார்கள். என்றதுடன் லொஸ்லியா தன் அப்பா மீது வைத்திருக்கும் பாசத்தை பார்த்து நானே அழுதுவிட்டேன். லொஸ்லியா என் மகளை போன்றவர். அவர் இந்த நிகழ்ச்சியில் வெற்றிபெற வேண்டும், மக்களின் ஆதரவுடன் லொஸ்லியா இறுதி 4 பேருக்குள் வருவார் வர வேண்டும் என பிராத்திக்கிறேன் என கூறியுள்ளார்.
இந்த நிலையில் அவரது தோழி ஒருவர் கொடுத்துள்ள பேட்டியில் லொஸ்லியா பொறுமையாக இருக்க கூடியவள், யாருடைய மனதையும் நோகடிக்க கூடாது என நினைப்பவள். ஆனால் அவளது உண்மை முகத்தை நீங்கள் சீக்கிரம் பார்க்க போகின்றீர்கள்.
அவளுக்கு அதிகம் கோவம் வரும் தேவை இல்லாமல் கோபப் பட மாட்டால் ஆனால் கோவப் பட வேண்டிய இடத்தில் அமைதியாக மாட்டாள். இது வரை யாரையும் காதலிக்கவில்லை. வீட்டிற்குள்ளும் காதலிக்க மாட்டாள். உண்மை முகத்திற்காக காத்திருப்போம்..!!