யாரும் அறியாத லொஸ்லியாவின் இன்னோர் பக்கம்..! அவரின் சிரிப்புக்குள் இத்தனை சோகம் உள்ளதா..!? உண்மையை உடைத்த அபிராமி..!!
” லொஸ்லியா” பிக் பாஸ் வீட்டின் பட்டாம் பூச்சியாக இருந்தவர். காதல் என்று இன்று வர பட்டாம்பூச்சியின் சிறகுகள் உடைக்கப் பட்டது என்று தான் கூற வேண்டும்.அவரது குறும்பு தனங்கள் முற்றிலும் மாறி போனது. இதனால் சிலர் லொஸ்லியாவை வெறுக்க ஆரம்பித்தனர். சிலர் நேசித்தனர். 105 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த லொஸ்லியா பிக் பாஸ் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் இருந்து லொஸ்லியா பற்றிய நிறைய விடயங்கள் வெளியாகி உள்ளது. தந்தையுடன் சேர்ந்து ஆண் குழந்தை போல் உழைத்து குடும்பத்தை காப்பாற்றிய லொஸ்லியா வீட்டிற்கு அனைத்தும் என்று மாறியுள்ளார். தங்கைகளுக்கு மட்டும் இன்றி தனது தாய்க்கும் தாயாக மாறி ஒட்டுமொத்த பொறுப்புகளையும் தானே ஏற்றுக் கொண்டுள்ளார்.
வீட்டில் லொஸ்லியா எடுக்கும் எந்த முடிவும் சரியாக இருக்கும் என்பது குடும்பத்தினரின் நம்பிக்கையாக இருந்தது. அதனால் தான் லொஸ்லியா கவினுடனான காதலையும் ஏற்றுக் கொண்டார். ஆனால் வெளியே வந்ததும் கவின் தனக்கு பொறுப்புகள் இருப்பதாக கூறி லொஸ்லியாவை விட்டு விலகியுள்ளார். இருப்பினும் லொஸ்லியாவிற்கு கவினுடனான காதல் குறையவில்லை.
பிக் பாஸ் கொண்டாட்டத்தின் போது கூட கவினை அனைவரும் பாராட்டிய போது ஆனந்த கண்ணீர் விட்டது லொஸ்லியா மட்டும் தான்..! லொஸ்லியா பற்றி அபிராமி கூறுகையில் லொஸ்லியாவின் வயதில் இத்தனை கஸ்டம் அனுபவித்து விட்டாரா என தோன்றுகிறது. எப்போதும் சிரிக்கும் அவளின் சிரிப்பின் பின் பல சோகங்கள் மறைந்துள்ளது.
கண்முன்னே அக்காவின் மரணத்தை பார்த்த அவள் பட்ட கஷ்டங்கள் யாருக்கும் தெரியாது. அவளது தோழிகளின் உணவில் வாழ்ந்து தங்கைகளை படிக்க வைத்திருக்கிறாள். அப்பாவின் பணம் ஊரில் உள்ள கடன்கள் கட்டவே காணமல் இருந்த போதும் ஒட்டுமொத்த குடும்பத்தையும் தனியாக சுமந்தவள்..எப்போதும் அவள் ஹாப்பியா இருக்கனும் என்பதே என் ஆசை என கூறியுள்ளார்..!!