ஹோட்டலில் செய்த மோசமான செயலால் கைதாகபோகும்.. பிக் பாஸ் மீரா மிதுன்..! காரணம் இது தானாம்..!!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்பு இருந்து மீரா மிதுன் மீது ஏராளமான புகார்கள் இருந்தது. ஆனால் எதையும் கண்டுகொள்ளாமல் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தார் மீரா மிதுன். வீட்டில் தர்சன் காதலித்தார், தன்னால் முகென் பிரபலமானார், சேரன் இடுப்பை பிடித்தார் என பல சர்ச்சைகளை கிளப்பினார்.
அதனால் ரசிகர்களால் மீரா மிதுன் வெளியேற்றப் பட்டார். வெளியே வந்தபின் சில வீடியோக்களை பதிவேற்றி வம்பிழுத்தார். யாருமே அவரை கண்டுகொள்வதாக இல்லை. இதனால் நேற்றைக்கு முன் தினம் பிரஸ் மீட் ஒன்றை பிரபல ஹோட்டலில் ஏற்பாடு செய்தார்.
விஜய் டிவி தனக்கான சம்பள பணத்தை தரவில்லை என குற்றம் சாட்டியதுடன், இது தொடர்பாக புகார் கொடுக்கப் போவதாக கூறினார். அத்துடன் தமிழ் நாட்டு பொலீஸ் பணத்திற்காக செயற்படுவதாகவும் தனக்கு எதிராக பதிவு செய்யப் பட்ட அத்தனை வழக்குகளும் பணத்திற்காக செய்யப் பட்டவை எனவும் கூறினார்.
தன்னை அவமானப் படுத்துவதற்காக எதிரிகள் திட்டம் தீட்டி பொலீஸாருக்கு பணம் கொடுத்து வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறியதுடன் தமிழ் நாட்டுகாவல் துறையை மிக மோசமாக விமர்சித்தார். இந்த பிரஸ் மீட் முடிந்ததும் ஹோட்டல் மனேஜர் மீரா மிதுனிடம் இது போல் சட்டத்திற்கு எதிரான பிரஸ் மீட் எங்கள் ஹோட்டலில் இனி ஏற்பாடு செய்ய வேண்டாம்.
உங்களுக்கு நாம் அதற்கு அனுமதி தரவில்லை என கூறினார். இதனை கேட்டதும் கோபப் பட்ட மீரா மிதுன் கெட்ட வார்த்தையில் திட்டியதுடன் மிகப் பெரிய பிரபலமான என்னிடம் எப்படி இப்படி பேசினாய் என கேட்டு கெட்ட வார்த்தைகளால் திட்டினார்.
இதில் நடந்த வாக்கு வாதத்தில் ஹோட்டல் மேனேஜரை கொலை செய்துவிடுவதாக மீரா மிதுன் கூறியவை சிசிடிவி காட்சிகளில் பதிவாகி உள்ளது. இதனை அடுத்து மீரா மீது கொலைமிரட்டல் புகார் கொடுக்கப் பட்டுள்ளது. இதனால் மீரா மிதுன் கைது செய்யப் படபோவதாக செய்திகள் வைரலாகி உள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் புடிங்க சார் புடிச்சி ஜெயில்ல போடுங்க சார் என கூறி வருகின்றனர்..!!