பெண் குழந்தை பிறந்தால் வெறுப்படைந்த தந்தை பிறந்த 15 நாட்களிலே ஆற்றில் புதைத்த கொடூரம் …!!!
பெண் குழந்தை பிறந்தால் வெறுப்படைந்த தந்தை பிறந்த 15 நாட்களிலே ஆற்றில் புதைத்த கொடூரம் அரங்கேறியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள சுந்தரேசபுரம் கிராமத்தை சேர்ந்த வரதராஜன் – சவுந்தர்யா தம்பதியினருக்கு திருமணமாகி 15 மாதங்களே ஆகின்றனர். இந்த நிலையில் 15 நாட்களுக்கு முன் இவர்களுக்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. தனக்கு பிறந்தது பெண் குழந்தை என்று அறிந்தவுடனே மருத்துவமனையில் இருந்து வரதராஜன் சென்று விட்டார்.
அதையடுத்து சவுந்தர்யாவின் உறவினர்களே சவுந்தர்யாவை டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். வீட்டிற்கு வந்த 3ஆவது நாள் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குழந்தையை எடுத்துச் சென்று தென்பெண்ணை ஆற்றில் புதைக்க சென்றதாக கூறப்படுகின்றது. அருகில் இருந்தவர்கள் பார்த்து குழந்தையை வீட்டிற்கு கொண்டு வந்துள்ளனர்.
கணவனின் நடவடிக்கையால் பயந்து போன சவுந்தர்யா தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் வரதராஜன் சமாதானமாக பேசி குழந்தையுடன் சவுந்தர்யாவை வீட்டிற்கு கூட்டி வந்தார். திங்கட்கிழமை அன்று மாலை குழந்தையை யாருக்கும் தெரியாமல் எடுத்து சென்று தென்பெண்ணை ஆற்றில் புதைத்துள்ளார்.
குழந்தை வீட்டில் இல்லாத நிலையை கண்டு அதிர்ச்சி அடைந்த சவுந்தர்யா உறவினர்களிடம் கூறியுள்ளார். வரதராஜன் மீது சந்தேகம் அடைந்த அவர்கள் தென்பெண்ணை ஆற்றில் சென்று பார்த்த போது புதிதாக பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது அந்த பள்ளத்தில் சந்தேகத்தின் பேரில் தோண்டிய போது குழந்தையை துணியில் சுற்றி புதைத்து வைத்தது தெரிய வந்தது.
அதையடுத்து வரதராஜனை விசாரணை விசாரித்ததில் குழந்தையை குழந்தையை புதைத்தது ஒப்பு கொண்டுள்ளார். தகவல் அறிந்து வந்த திருக்கோவில் பொலிஸார் வரதராஜனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெண் குழந்தை என்ற காரணத்தால் பெற்ற குழந்தையை தகப்பனே ஆற்றில் புதைத்து கொன்றது அனைவரையும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.