இன்று பிக் பாஸ் வீட்டை விட்டு சேரன் வெளியேறுவார் என எதிர் பார்த்தவர்களுக்கு மிகப் பெரிய ஷாக் கொடுக்கப் பட்டுள்ளது. இன்றைய இரண்டாவது ப்ரோமோவில் செரின் காப்பாற்றப் பட்டதை தொடர்ந்து, கவினும் காப்பாற்றப் படுகிறார்.
லொஸ்லியா மற்றும் சேரன் இருவரும் இறுதியாக இருந்த நிலையில் லொஸ்லியாவிடம் யார் வெளியே செல்ல வேண்டும் என கேட்கப் பட்டதற்கு நான் போனால் மகிழ்ச்சி சேரன் காப்பாற்றப் பட வேண்டும் என கூறினார். ஆனால் கமலஹாசன் லொஸ்லியா உங்கள் ஆசைப்படி சேரனுடன் நீங்களும் வெளியே வாருங்கள் என கூறப்படுகிறது.
91 வது நாளான இன்று டபுள் எவிக்சன் நடந்துள்ளதாக ப்ரோமோவில் தெரிகிறது.லொஸ்லியா மற்றும் சேரன் வெளியேற முன் கவின் லொஸ்லியாவிடம் செல்கிறார் அப்போது லொஸ்லியா நான் மகிழ்ச்சியாக செல்கிறேன் நீ போ என்கிறார். தர்சன் மற்றும் செரினின் கூட்டு சதி இனிதே நிறைவேறி உள்ளது.
எது எப்படி நடந்தாலும் முகென் மட்டுமே பிக் பாஸ் வெற்றியாளராக வர வேண்டும் என்பதில் ரசிகர்கள் உறுதியாக இருக்கின்றனர்…!!