சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப் பட்ட மானசி போட்ட பதிவு.! சோகத்தில் ரசிகர்கள்.!!
ப்பர் சிங்கர் நிகழ்ச்சியை இருந்து வெளியேற்றப் பட்டவர் மானசி. நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்து வெளியேறும் வரை மிக அழகாக பாடியவர் மானசி, நல்லது, கெட்டது எதை சொன்னாலும் சிரித்துக் கொண்டே ஏற்றுக் கொள்ளும் மானசியை சக போட்டியாளர்கள், நடுவர்கள், மட்டும் இன்றி ரசிகர்களுக்கும் பிடித்து போனது, மானசிக்கு ரசிகர் மன்றம் கூட ஆரம்பித்தனர்..ஆனால் காரணம் இல்லாமல் நேற்றைய தினம் வெளியேற்றப் பட்டார்.
வெளியேறிய மானசி மற்றவர்கள் போல் நிகழ்ச்சியையோ நடுவர்களையோ திட்டாமல் பதிவிட்டுள்ளார். அதில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நிறைய கற்றுக்கொண்டேன், முதலில் என் அம்மா அப்பாவிற்கு நன்றி. அடுத்து நடுவர்களுக்கு மிக்க நன்றி நிறைய கற்றுக் கொண்டேன் கற்றுக் கொள்கிறேன், நல்ல குடும்பம் ஒன்று கிடைத்துள்ளது,
உங்களை மிஸ் செய்வது தான் கவலை,வைல் கார்ட் ரவுண்ட் மூலம் மீண்டும் வருவேன், என கூறியுள்ள மானசி என்னை இது வரை அழைத்து வந்த அனைத்து ரசிகர்களுக்கும் மிக்க நன்றி. எனக்காக இவ்வளவு ரசிகர்கள் இருக்கின்றீர்கள் என்று நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, அனைவருக்கும் நன்றிகள் உங்கள் அன்பும் ஆதரவும் தொடர்ந்து எனக்கு தேவையாகிறது, என மேலும் தெரிவித்துள்ளார். மானசியின் பதிவு தற்போது வைரலாகி வருகின்றது.!!