இன்றைய ராசி பலன் – 31.08.2021
இன்றைய பஞ்சாங்கம்.31-08-2021, ஆவணி 15, செவ்வாய்க்கிழமை, நவமி திதி பின்இரவு 04.24 வரை பின்பு தேய்பிறை தசமி. ரோகிணி நட்சத்திரம் காலை 09.44 வரை பின்பு மிருகசீரிஷம். அமிர்தயோகம் காலை 09.44 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
மேஷ ராசி நேயர்களே:பிள்ளைகளின் படிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். சிறிய அளவில் உடல்நலம் பாதிக்கப்டும். குடும்பத்தில் இதுவரை இருந்த நெருக்கடிகள் சற்று விலகும்.உறவினர்களுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் நீங்கி சுமுக உறவு ஏற்படும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும்.வழக்கமான பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும் நாள்.
ரிஷப ராசி அன்பர்களே:உற்றார் உறவினர்கள் உதவியால் ஓரளவு பிரச்சினைகள் குறையும்.குடும்பத்தில் உறவினர்களால் செலவுகள் ஏற்பட்டாலும் அதனால் மகிழ்ச்சியே ஏற்படும்.விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.தெய்வ வழிபாடு நிம்மதியை தரும். பிள்ளைகளை அனுசரித்துச் செல்லவும்.தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க பிரச்சினைகள் குறையும்
மிதுன ராசி காரர்களே:சகோதர வகையில் மனத்தாங்கல் வரும்.சிலருக்குக் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படும்.வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளால் குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும்.பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள்.. உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு குறையக் கூடும்.
கடக ராசி நேயர்களே:தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். மற்றவர்களின் மனநிலையை உணர்ந்து பேசும் பக்குவம் உண்டாகும். சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படும்.பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு புது நம்பிக்கையை தரும். வெளியூரில் இருக்கும் நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும்.
சிம்ம ராசி அன்பர்களே:புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். நீண்டநாள்களாக எதிர்பார்த்த பணம் இன்று கிடைக்கும். எளிதில் முடிய வேண்டிய செயல்கள் கூட காலதாமதமாகும்.கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும். எதிர்பார்த்த நல்ல செய்திவரும். வீண் விவாதங்களில் ஈடுபடவேண்டாம். வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும்.தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கன்னி ராசி காரர்களே:குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். பிள்ளைகள் நீண்டநாள்களாகக் கேட்டதை வாங்கித் தருவீர்கள்.நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும்.உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும்.
துலாராசி உறவுகளே:ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களால் மறைமுகத் தொல்லைகளும், விமர்சனங்களும் ஏற்படக்கூடும். வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள்.குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதாக இருந்தால், ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது.வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் இருப்பது சிறப்பு.
விருச்சிக ராசி நேயர்களே:கேட்ட இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள்.சகோதரர் களால் ஆதாயம் உண்டாகும்.வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபநிகழ்ச்சிகளுக்கான பேச்சு வார்த்தை சாதகமாகும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள்.
தனுசு ராசி அன்பர்களே:பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள்.பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும். பழைய கடன்களைத் தந்து முடிப்பீர்கள்.பிரபலங்களின் நட்பு கிடைக்கும். கல்லூரிக் கால நண்பர்களைத் தொடர்புகொண்டு பேசி மகிழ்வீர்கள். குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.
மகர ராசி காரர்களே:சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரும்.அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வயிறு தொடர்பான பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனம் தேவை.பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். சிலருக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்க வாய்ப்பு உண்டு.
கும்ப ராசி உறவுகளே:உடல் நிலை புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படும்.குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும்.உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.நண்பர்கள் துணை நிற்பர். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. முக்கிய முடிவு எடுப்பதில் பொறுமை அவசியம்.
மீன ராசி நேயர்களே:
விருந்தினர் வருகையால் வீடு களைக்கட்டும்.உடல் ஆரோக்கியம் மேம்படும்.வெளியூரிலிருந்து புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது. திருமண முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும்.உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு.திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.