கொடூரமாக தாக்கி குழந்தையின் வாயை உடைத்து இரத்தம் வடிய வீடியோ வெளியிட்டதற்கான உண்மை காரணம் இது தானாம், பொலீஸாரை அதிர வைத்த குழந்தையின் தாய்.!!
குழந்தையின் வாயில் கொடூரமாக குத்தி வாயில் இரத்தம் வடிய வடிய வீடியோ எடுத்து பகிர்ந்த தாயாரான துளசியை சத்தியமங்கலம் பொலீஸார் கைது செய்து விசாரணை செய்ததில் அவர் கொடுத்த வாக்குமூலம் பொலீஸாரை அதிர வைத்துள்ளது. சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் வடிவழகன்.
இவரது மனைவி துளசி. இவர்களுக்கு 4 மற்றும் 2 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இரண்டு வயது மகனான பிரதீப்பை வாயில் கொடூரமாக குத்தி இரத்தம் வடிய வடிய துளசி என்ற பெண் வீடியோ வெளியிட்டார். இந்த வீடியோவை வைத்து குறித்த பெண்ணை கைது செய்த பொலீஸார் விசாரணை செய்த போது கள்ளக் காதலன் கூறியதால் கொடுமையை செய்ததாக தெரிவித்துள்ளார்.
கணவர் வேலைக்கு சென்ற வேலையில் சென்னையை சேர்ந்த பிரேம்குமார் என்ற நபர் கால் செய்துள்ளார். யார் என்றே தெரியாமல் ஆரம்பித்த உரையாடல் கள்ளக் காதலாக மாறியுள்ளது. வீடியோ கால் மூலம் இருவரும் பேசிக்கொண்ட நிலையில் துளசியை வர்ணிக்கும் பிரேம்குமார் துளசியின் அழகில் மூத்த மகன் மட்டுமே இருப்பதாகவும் இரண்டாவது மகனை பார்க்கவே பிடிக்கவில்லை, அசிங்கம், என கூறியதுடன் இந்த குழந்தை உன் அழகை கெடுக்கிறது என தெரிவித்துள்ளார்.
இதனால் தனது இரண்டாவது குழந்தையை வெறுக்க ஆரம்பித்துள்ளார் துளசி. தினமும் அடிப்பது, உணவு கொடுப்பதில்லை என கொடுமை செய்துள்ளார். இது போதாது என கள்ளக் காதலனான பிரேம்குமார் குழந்தையின் வாயை உடைத்து வீடியோ அனுப்பும் படி கூற துளசியும் பெற்ற குழந்தையை கொடூரமாக தாக்கி வீடியோ அனுப்பியுள்ளார்.
ஏன் வாயில் காயம் என கணவர் வடிவழகன் கேட்ட போது கட்டிலில் இருந்து விழுந்து விட்டதாக கூறியுள்ளார். வீடியோ வெளியான பின்னரே கணவருக்கு உண்மை தெரிய வந்துள்ளது. துளசியை ஏற்கனவே கைது செய்த பொலீஸார் பிரேம் குமாரை தேடி வருகின்றனர்.!!