சேரனை தொடர்ந்து மதுமிதாவை சந்தித்த பிக் பாஸ் பிரபலம்..! கோபங்கள் தீர்ந்துவிட்டதா.!?யார்னு நீங்களே பாருங்க..!!
தொலைகாட்சி நடிகையாக அறிமுகமாகி பின் திரைப்படங்களில் காமெடி நடிகையாக கலக்கி வருபவர் மதுமிதா. இவர் சந்தானத்துடன் ஜோடி சேர்ந்து ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தில் கலக்கிய அட அட தேன் அட காமெடி இன்று வரை பலரை சிரிக்க வைத்துக் கொண்டிருக்கின்றது.
சில மாதங்களுக்கு முன்பு திருமணமான மதுமிதா கடந்த பிக் பாஸ் சீசன் 3ல் கலந்துகொண்டார். ஏதாவது ஒன்றை செய்து பிரச்சனை ஏற்படுத்திக் கொண்டிருந்த அவர் இறுதியாக செரினுடன் ஏற்பட்ட மாநில பிரச்சனையால் கைகளை அறுத்துக் கொண்டார்.
இதனால் விஜய் டிவி அவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றியது. வெளியேறிய மதுமிதா அனைவருடனும் கோபத்தில் இருந்தார். சேரன் மற்றும் கஸ்தூரி தவிர்த்து யாருடனும் பேசவில்லை. இந்த நிலையில் மதுமிதாவை நடிகை ரேஷ்மா சென்று சந்தித்துள்ளார்.
மற்றைய போட்டியாளர்கள் அனைவரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டாலும் யாருடனும் மதுமிதா ஒட்டவில்லை. இந்த நிலையில் மதுமிதாவை ரேஷ்மா சந்தித்து புகைப்படம் வெளியிட்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது..!!;
Enjoying the weekend with besties. Surround yourself with kind souls, keep life motivated bring in the new year with positivity ,❤ @madhumithamoses @arunkumarrajanofficial @nishanthravichandran pic.twitter.com/gXsZcedIIf
— Reshma Pasupuleti (@reshupasupuleti) December 13, 2019