மலேசியாவில் கெ அடிலான் கட்சியின் விதிகளை மீறுவோருக்கு மீது கடும் நடவடிக்கை…!!!
மலேசியாவில் கெ அடிலான் கட்சியின் விதிகளை மீறுவோருக்கு மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அக்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார். கெ அடிலான் கட்சியின் வருடாந்தர மாநாட்டில் நிறைவு உரையாற்றிய போது அவர் இவ்வரி தெரிவித்துள்ளார். கெ அடிலான் கட்சித் தலைவர் அன்வாருக்கும், துணைத் தலைவர் திரு. அஸ்மின் அலிக்கும் இடையில் சுமுகமான உறவு இல்லை என்று கூறப்படுகிறது. திரு. அஸ்மினுக்கு ஆதரவாகச் செயல்படும் மூத்த தலைவர்கள் சிலர் கட்சி மாநாட்டின் நிறைவு விழாவைப் புறக்கணித்தனர்.