16 மலேசிய கப்பல் ஊழியர்களை கைது செய்த ஈரான்..!!
1.3 மில்லியன் லீட்டர் பெட்ரோலை சட்டவிரோதமாக கடத்திய 16 மலேசிய கப்பல் ஊழியர்களை ஈரானில் கைது செய்துள்ளது. பெயர் குறிப்பிடாத அபு மூசா தீவிலிருந்து 15 கடல் மைல் தூரத்தில் இருந்த இந்த கப்பலை ஈரான் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தியதோடு கடத்திய பெட்ரோலை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பிடிபட்ட அந்த 16 கப்பல் ஊழியர்களை அடையாளம் காணும் முயற்சி அண்மையில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக வெளியுறவு துறை அமைச்சர் சைபுடின் அப்துல்லா குறிப்பிட்டுள்ளார். இதுவரைக்கும் நடத்திய விசாரணையில் சில தகவல்கள் அறியப்பட்டுள்ளன. முழு விவரம் கிடைத்தவுடன் அறிக்கை தயார் செய்யப்பட்டு வெளியுறவு அமைச்சு அதை வெளியிடும் என கூறப்படுகிறது.