சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை மீரா மிதுன்.! அடுத்து என்ன ஆவலுடன் காத்திருக்கும் நெட்டிஷன்கள்.!!
சர்ச்சை நடிகை மீரா மிதுன் புழல் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். மாடலிங் துறையில் அறிமுகமாகி 8 தோட்டாக்கள். திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை மீரா மிதுன். திரைப்படம் பெரிதாக பேசப்படாத நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார்.
சேரன், தர்ஷன் என ஆரம்பித்து விஜய்,சூர்யா, அவர்களின் குடும்பம் என கேவலமாக பேசிய மீரா மிதுன் தன்னை பிரபலமாக காட்டிக் கொள்ள சர்ச்சை விடயங்களை செய்ய ஆரம்பித்தார். இறுதியில் சாதி பற்றி பேசி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் மீரா மிதுன் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
சிறையில் பல காரணங்களை காட்டி ஜாமீன் கேட்ட போதும் மீரா மிதுனின் ஜாமீன் நிராகரிக்கப் பட்டது, மீண்டும் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்த மீரா மிதுன் தடுப்பூசி போட்டுக் கொண்டதால் உடல் சோர்வாக இருப்பதாகவும், சிறையில் 35 நாட்களுக்கு மேலாகி விட்டதாகவும் கூறியதுடன் உடல் நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் கொடுக்கும் படியும் கேட்டிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி நேற்றைய தினம் மீரா மிதுனுக்கு ஜாமீன் வழங்க உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் நீரா மிதுன் புழல் சிறையில் இருந்து இன்றைய தினம் ஜாமீனில் வெளியேறியதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதனை பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.!!