விஜய் டிவியால் என் வாழ்க்கை போய்விட்டது…! மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மீரா மிதுன்..!!
அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்பவர் நடிகையும் மாடல் அழகியுமான மீரா மிதுன். இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து சில நாட்களில். தர்சனை காதலிப்பதாக கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். அதன் பின் சேரன் தன்னுடைய இடுப்பை பிடித்ததாக கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
ஆனால் குறும்படம் போட்டு அவர் கூறியது பொய் என நிரூபித்தார்கள். இது இப்படி இருக்க முகென் மீது வீண் பழி சுமத்தி வீடியோ ஒன்றை வெளியிட கூறினார், அதுவும் அவரை அறியாமல் வெளியே வந்தது. தற்போது இன்னுமொரு புகாரை தெரிவித்துள்ளார். அதில் தமிழ் சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, அதனால் பலரது கற்புகள் சூரையாடப் படுகிறது.
இதனால் தான் பிரியங்கா சோப்ரா போன்றோர் மீண்டும் இந்திய சினிமாவிற்கு வரவில்லை, எனக்கும் தற்போது கொடுமை நடந்துள்ளது.நான் 13 நாட்களாக எங்க வீட்டு பிள்ளை திரைப்படத்தில் நடித்தேன்,நான் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதால் இயக்குனர் பாண்டிராஜும், சன் பிக்சர்ஸ் நிறுவனமும் நான் நடித்த காட்சிகளை நீக்கி விட்டார்கள்.
சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் இருந்து வந்தவர் அவர் படத்தில் நடிக்கலாம் நான் பிக் பாஸில் கலந்துகொண்டதால் நடிக்க கூடாதா ஆண் ஆதிக்கம் என குறிப்பிட்டுள்ள மீரா மிதுன் விஜய் டிவியால் என் திரைப்பட வாய்ப்பும் வளர்ச்சியும் போய் விட்டது என குறிப்பிட்டுள்ளார்..,!!