“செல்பி எடுக்க செல்லவில்லை” இளம்பெண்ணின் மரணம் தொடர்பாக வெளியாகி உள்ள பரபரப்பு தகவல்..!
நேற்றைக்கு முன் தினம் முத்தாபுதுப்பேட்டை கண்டிகை பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் செல்பி எடுக்கச் சென்ற இளம்பெண் மரணம் என்ற செய்தி வைரலாகி வந்தது… ஆனால் மரணமடைந்த பெண் மற்றும் அவரது வருங்கால கணவரின் தொலைபேசி இரண்டுமே கிணற்றில் அருகில் பாதுகாப்பாக வைக்கப் பட்டிருந்தது.. இது தொடர்பாக தற்போது உண்மை தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை ஆவடி நவஜீவன் பகுதியை சேர்ந்தவர் அப்பு இவர் இன்ஜினீயரிங் முடித்துவிட்டு வேலைக்காத காத்திருக்கின்றார். இவருக்கு மார்சி ஸ்டெபி என்ற பி.கொம் முடித்துவிட்டு ஐடி நிறுவனத்தில் பணி புரியும் பெண்ணை வீட்டினர் திருமணம் பேசி நிச்சயதார்த்தம் செய்தனர். இவர்களது நிச்சயதார்த்தம் கடந்த மாதம் 6ம் திகதி இடம்பெற்றது. நிச்சயதார்த்தத்தின் பின் இருவரும் காதலிக்க தொடங்கினார்கள்.
ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டதுடன் அதிக அளவான அன்புடன் இருந்துள்ளனர். சம்பவ தினத்தன்று மெர்சிக்கு விடுமுறை என்பதால் அப்புவிற்கு கால் செய்துள்ளார் . அப்பு வெளியில் நின்றதால் போன் ஆன்சர் செய்ய முடியாமல் போனது. இதனால் அப்புவின் தம்பிக்கு கால் செய்து அப்புவிடம் கொடுக்கும் படி கூறியதுடன் அப்புவிடம் நான் உங்கள் வீட்டிற்கு வருகிறேன் என்னை வெளியே அழைத்து சொல்லுங்கள் என கூறியுள்ளார்.
அப்பு வீட்டிற்கு வந்த மெர்சியிடம் பிகில் திரைப்படம் பார்க்க போவோம் என அப்பு கேட்க.. முதலில் ஆம் என்றவர் பின் அப்புவின் தாயார் மருத்துவ மனைக்கு சென்றிருப்பதால் திரைப்படம் பார்க்க செல்ல வேண்டாம் வெளியே சும்மா சென்று வரலாம் என என மெர்சி கூற இருவரும் பைக்கில் சென்றுள்ளனர். கண்டிகை பகுதியில் அழகான வயல்களை கண்டதும் போட்டோ எடுத்துக் கொள்ளலாம் என கூறியுள்ளார்.
இருவரும் வயலில் இறங்கி நடந்தபோது கிணறு இருந்ததால் கிணற்றில் கால் நனைக்கலாம் என மெர்சி கூற வேண்டாம் என அப்பு தடுத்துள்ளார். விதி யாரை விட்டது என்பது போல் ” எல்லோரும் காதலியின் ஆசையை நிறைவேற்றுகின்றனர். நீ மனைவியாக வரப்போகும் என் ஆசையை தடுக்கிறாய் என கூறியுள்ளார். இதனால் மெர்சியின் ஆசையை நிறைவேற்ற இருவரும் கிணற்றில் இறங்கியுள்ளனர்.
4ம் படியில் அப்புவும் மூன்றாம் படியில் மெர்சியும் இறங்கியுள்ளனர்.இதன் போது மெர்சி பாசி வழுக்கிய நிலையில் அப்பு மீது விழுந்துள்ளார்.இருவரும் கிணற்றுக்குள் விழுந்த நிலையில் மெர்சி கிணற்றில் அடி பகுதிக்கு சென்று விட மேல் பகுதியில் தத்தளித்துக் கொண்டிருந்தவரை விவசாயம் செய்துகொண்டிருந்த வயதானர் காப்பாற்றியதுடன் அருகில் இருந்தவர்களின் உதவியுடன் மெர்சியை சடலமாகவே மீட்க முடிந்துள்ளது.
சம்பவம் குறித்து அப்பு குறிப்பிடுகையில் நாங்கள் செல்பி எடுக்க கிணற்றில் இறங்கியதாக செய்தி பரப்புகின்றனர். நான் என்னவளின் ஆசைக்காகவே அழைத்து சென்று பறிகொடுத்துவிட்டு தவிக்கிறேன், நீங்கள் என்னை நோகடிக்காதீர்கள் என கேட்டுக் கொண்டுள்ளார்..!!