இறுதி ஆசையே இறுதி பயணமான சோகம்..! முரளியின் மரணமும் பலர் அறியாத ரகசியமும்..! யாருக்கெல்லாம் முரளியை பிடிக்கும்.? பிடித்தவர்கள் படியுங்கள்..!!
“நடிகர் முரளி” காதலை சொல்லாமல் மனதுக்குள் யாரேனும் வைத்திருந்தால் உடனடியாக எமக்கு நினைவில் வருவது முரளியை தான். இவரது அனைத்து திரைப்படத்திலும் காதல் சோகம் இருந்துகொண்டே இருக்கும். அன்று ஏராளமான முன்னணி நடிகர்கள் வந்து சென்ற போதும் முரளி யாருக்கும் போட்டி இல்லாமல் நடித்துக் கொண்டிருந்தார்.
எத்தனை முன்னணி நடிகர்களின் திரைப்படம் வெளியானாலும் முரளியின் திரைப்படத்திற்கான கூட்டம் குறையாது. இவருக்கான தனித்தன்மை இருந்தது பல நடிகர்கள் வில்லனாக அறிமுகமாகி ஹீரோ ஆனார்கள்,சிலர் ஹீரோவாக நடித்து பின் துணை நடிகர்களானார்கள் ஆனால் முரளி நடித்த அத்தனை படங்களிலும் அவரே ஹீரோவாக இருந்தார்.
ஆனால் மகனுக்காக பாணா காத்தாடி திரைப்படத்தில் சில காட்சிகளில் நடித்தார். அந்த திரைப்படமே அவரது இறுதி திரைப்படமானது குறிப்பிடதக்கது. நடிகர் முரளி கன்னடக்காரர் ஆனால் தன்னை வாழ வைத்தது தமிழ் என்பதில் உறுதியாக இருந்தார் காரணம் அவரது தாயார் தமிழ். தமிழ் மீதான பற்றால் காவேரி பிரச்சனையின் போது திரையுலகத்தினருடன் இணைந்து முன்னிற்று போராட்டத்தை நடத்தினார்.
தமிழ் சினிமாவில் எந்த ஒரு கிசுகிசுவிலும் மாட்டாத முரளியின் திருமண வாழ்க்கையும் அழகானது. முரளிக்கு தன் மகனை ஹீரோவாக்கிவிட வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதனை செயற்படுத்தினார். பாணா காத்தாடி திரைப்படத்தில் அதர்வா முரளி அறிமுகமானார். மகனுடன் சிறிய காட்சிகளில் தோன்றி நடித்த முரளிக்கு அது தான் அவரது இறுதி திரைப்படம் என்று அறிந்திருக்க வாய்ப்பு இல்லை.
தனது ஆசை நிறைவேறிவிட்ட மகிழ்ச்சியில் இருந்தார் முரளி. ஆனால் அனைவருக்கும் பிடித்தவர்களை இறைவனுக்கும் பிடித்துப் போகுமே.. அதனால் போதும் வாழ்ந்தது என எடுத்துக் கொண்டான். திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்தார்.! மண்ணை விட்டாலும் இன்றளவும் மக்கள் மனதை விட்டு நீங்காமல் இருக்கிறார் முரளி..!!