தமிழ் ஈழத்தின் மீதான நேசத்தால் தன் மகனுக்கு ஈழத்து பெண்ணை இறந்தும் மணமுடித்து வைத்த மணிவண்ணன்..! அவரது மகன் & மருமகள் யார் தெரியுமா.? இதோ..!!
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர், நடிகர் என மக்களால் புகழப் பட்டவர் நடிகர் மணிவண்ணன் அவர்கள். பணத்திற்காக மட்டும் இல்லாமல் தனக்கு கொடுக்கப் படும் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுப்பதில் அவருக்கு நிகர் அவர் மட்டுமே. அது மட்டும் இன்றி அவர் இயக்கிய திரைப்படங்களிலும் கதைக்கு முக்கியத்துவம் இருக்கும்.
மணிவண்ணன் இந்திய தமிழர்களுக்கு மட்டும் இன்றி ஈழ தமிழர்களுக்கும் மிகவும் நெருக்கமானவர். நாம் தமிழர் கட்சியின் உறுப்பினராக இருந்த மணிவண்ணன் ஈழத்தமிழர்களுக்கு விடிவு வேண்டும் என பல ஆர்பாட்டங்களில் கலந்து கொண்டவர். அத்துடன் தனது மகனை ஈழத் தமிழ் பெண்ணுக்கு திருமணம் செய்து வைப்பேன் என உறுதியாக கூறி இருந்தார்.
அதே போல் லண்டனில் வசித்து வந்த ஈழத் தமிழ் பெண்ணான அபி என்பவரை தனது மகனான ரகுவண்ணனுக்கு நிச்சயதார்த்தம் செய்தார். 2013ம் ஆண்டு ஜூன் மாதம் இவர்கள் திருமணம் நடக்கவிருந்த நிலையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணரமாக ஜூன் 13ம் திகதி மணிவண்ணன் இறந்தார்.
கணவர் இறந்த துக்கம் தாங்காது அதே மாதத்தில் மணிவண்ணனின் மனைவி செங்கமலமும் இறந்து போக திருமணத்தை உடனடியாக நடந்த முடியாமல் போனது. ஆனால் மணிவண்ணனின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என நினைத்த பலர் 2013ம் ஆண்டே திருமணத்தை நடத்த விரும்பினார்கள்.
மணிவண்ணனின் நெருங்கிய நண்பர்களின் நல் ஆசியுடன் அபி ரகுவண்ணன் திருமணம் நடந்து முடிந்தது. ரகுவண்ணன் மற்றும் அபி ஜோடிக்கு தற்போது ஆத்விக் ஆதித்யன் என்ற இரண்டு குழந்தைகளும் உள்ளனர். ரகு வண்ணன் ஏற்கனவே மாறன், தொடக்கம், கோரிபாளையம், தமிழ் தேசம், நாகராஜ சோழன் எம் ஏ எம் எல் ஏ திரைப்படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிட தக்கது..!