செல்போனுடன் கிணற்றுக்குள் விழுந்த நடிகை நமீதா.! கதறி துடித்த கிராம மக்கள்.!
தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகி கவர்ச்சி நாயகி, வில்லி என அசத்தியவர் நமிதா. பட வாய்ப்புகள் இல்லாமல் போக சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவருக்கு பிக் பாஸ் செல்லும் வாய்ப்பு கிடைக்க பிக் பாஸ் சீசன் ஒன்றில் கலந்துகொண்டார். ரசிகர்களின் ஆதரவை பெற முடியாமல் வெளியே வந்த நமீதா தனது காதலனை திருமணம் செய்துகொண்டார்.
அதன் பின் சில திரைப்படங்களில் நடித்து வந்த நமீதா தற்போது “பவ் பவ்” என்ற பெயரில் திரைப்படம் ஒன்றை தயாரித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் அவரே நாயகியாக நடிக்கிறார். “பவ் பவ்” திரைப்படம் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் உருவாகி வருகிறது. இதனை இரட்டையர்களான ஆர்.எல். ரவி மற்றும் மேத்யூ ஸ்கரியா ஆகியோர் இந்தப் படத்தை இயக்குகின்றனர்.
கடந்த சில நாட்களாக இந்த திரைப்படத்தில் பட பிடிப்புகள் திருவனந்தபுரம் சித்ராஞ்சலி ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது. இந்த கதையில் நாய்க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதன் படி கிணற்றுக்கு அருகில் நமீதா தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்கும் போது மொபைல் கிணற்றுக்குள் விழுந்துவிட நமீதாவும் தடுமாறி கிணற்றுக்குள் விழுவது போலவும் பின் நாய் காப்பாற்றுவது போலவும் கதை உள்ளது.
அதன் படி நமீதா திடீரென கிணற்றுக்குள் விழ அருகில் இருந்த மக்கள் கதறியதுடன், உடனடியாக அவரை மீட்க கிணற்றுக்குள் குதிக்க தயாராகி உள்ளனர். இது திரைப்பட சூட்டிங் என்றும் கிணற்றுக்குள் பாதுகாப்பாக நமிதா உள்ளார் எனவும் படக்குழு புரிய வைத்த பின்னரே மக்கள் அழுவதை நிறுத்தியுள்ளனர். கிராமம் என்பதால் போன் பேசிக்கொண்டிருந்த பெண் கிணற்றுக்குள் விழுந்து விட்டார் என்று நம்பியே கூச்சல் போட்டுள்ளது தெரிய வந்துள்ளது.!