நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்கு முன் பிக் பாஸ் அபிராமி என்ன செய்துகொண்டிருந்துள்ளார் தெரியுமா.!? ரசிகர்களை ஷாக் ஆக்கிய செய்தி..!!
பிக் பாஸ் வீட்டில் காதல் என்ற ஒன்றை ஆரம்பித்து வைத்தவர் அபிராமி. கவினை பார்த்ததுமே கவினுக்கு பேர்த் டே விஷ் கூறினார். அதன் பின் முதல் நாள் இரவே எனக்கு கவின் மீது காதல் உள்ளது. கவினுக்காக தான் நான் சரவணன் மீனாட்சி சீரியலே பார்ப்பேன் என செரின் மற்றும் சாக்ஷியிடம் கூறினார்.
ஆனால் அபிராமியின் காதலை கவின் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் வனிதாவின் பேச்சை கேட்டு கவினை வெறுப்பேற்ற முகெனுடன் இணைந்தார் கொடுமை முகென் மீது காதலில் விழுந்தார். முகெனுக்கு வெளியே காதலி இருப்பதால் முகென் அபிராமியின் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை.
அதன் பின் சண்டைகள் சர்ச்சைகள் என இருந்த அபிராமியை பிக் பாஸ் வீட்டில் இருந்து ரசிகர்கள் வெளியேற்றினார்கள். தற்போது நண்பர்களுடன் ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் அபிராமி பற்றி யாரும் அறியாத சில விடயங்கள் வெளியாகி உள்ளது. அபிராமி மாடலிங் செய்யும் போது பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்துள்ளார்.
அதன் பின் தான் நேர்கொண்ட பார்வை திரைப்பட வாய்ப்பு கிடைத்துள்ளது. திரைப்படம் நடித்து முடிந்ததும் பிக் பாஸ் வீட்டிற்கு வந்துள்ளார். அபிராமியை நடிகையாக மட்டும் தெரிந்த போட்டியாளர்களுக்கு தொகுப்பாளராக இருந்திருப்பது ஷாக் தான்…!