செம்பருத்தி சீரியலில் புதிதாக இணைந்த ரசிகர்கள் மனம் கவர்ந்த இளம் நடிகை.! எந்த கதாபாத்திரத்தில் நடிக்க போகிறார் தெரியுமா.??
டி ஆர் பியில் முன்னனியில் இருந்த சீரியல் செம்பருத்தி. பிரபல தொலைகாட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் இந்த சீரியல் திடீரென சரிவை சந்தித்தது. இதற்கான காரணம் திடீரென நடிகர் நடிகைகளை சீரியலை விட்டு நிறுத்தியது தான்.
ஹீரோவாக நடித்து வந்த கார்த்திக் திரைப்பட வாய்ப்பு கிடைக்க சீரியலை விட்டுச் சென்றார், அதே போல் கார்த்தியின் நண்பனாக நடித்த ஷ்யாமும் சீரியலில் இருந்து சென்றார். அடுத்ததாக கதிரின் மனைவியாக நடித்த ஜனனியை சீரியலை விட்டு நிறுத்தினார்கள்.
இதனால் தற்போது சீரியல் தடுமாறி போய் உள்ளது. இந்த நிலையில் சீரியலுக்கு புது முகங்களை அறிமுகப் படுத்துகின்றனர். தற்போது சீரியல் நடிகை துர்கா செம்பருத்தி சீரியலில் இணைந்துள்ளார். உமா என்ற கதாபாத்திரத்தில் துர்கா நடிக்கிறார்.
தனக்கு ஆதரவு தரும் படி இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் துர்கா கூறியதை தொடர்ந்து இந்த தகவல் உறுதி செய்யப் பட்டுள்ளது.!!