பாண்டியன் ஸ்டோர்ஸில் இருந்து வெளியேறும் நடிகை.! இவரும் வெளியேறுகிறாரா என்ற சோகத்தில் ரசிகர்கள்.!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து புதிய முல்லை விலகப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இரண்டாவது தம்பியாக நடிப்பவர் குமரன். கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் குமரனுக்கு ஜோடியாக நடித்து வந்தவர் சித்ரா,
இவருக்கு நபர் ஒருவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் ஹோட்டலில் தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவரது மரணம் மர்மமாகவே இருந்தது. இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பின் தங்கியது,பின்னர் புதிய முல்லையாக காவ்யாவை அறிமுகம் செய்தனர்.
தற்போது புதிய முல்லை மக்கள் மத்தியில் பிரபலமான நிலையில் தற்போது புதிய முல்லையும் சீரியலை விட்டு செல்லப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது, கவினுடன் அடுத்த திரைப்படத்தில் நடிக்க காவ்யா ஒப்பந்தம் செய்யப் பட்ட நிலையில் சீரியலில் இருந்து விலகப் போவதாக கூறப்படுகின்றது, புதிய முல்லையாக தர்ஷா குப்தா ஒப்பந்தம் செய்யப் பட உள்ளார்.!