பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்பும் மீரா மிதுன் அடங்குவதாக இல்லை. சேரன் மீது இருக்கும் கோபத்தில் பல பொய்யான விடயங்களை பரப்பி வருகிறார். இதில் சேரன் தன்னை கறுப்பு, இவள் எல்லாம் சினிமாவிற்கு தேவையா என்றெல்லாம் கேட்டார் என பொய்யான ஆதாரமற்ற விடயங்களை கூறி வருகிறார்.
!Advert!
இதனால் சேரனின் ரசிகர்கள் முதற்கொண்டு பலரும் மீராவை திட்டி தீர்த்து வருகின்றனர். இந்த நிலையில் மீராவின் தோழி என ஏற்கனவே நிஷா செரிப் பேட்டி கொடுத்திருந்தார். அவர் தனது தோழி இல்லை என்றும், தான் பிரபலமானவர் என்பதால் தன்னுடன் செல்பி எடுத்தவர்கள் எல்லோரும் தன்னை தோழி என கூறி பிரபலமாக முயற்சிப்பதாக கூறினார்.
இது இப்படி இருக்க இன்னுமொரு தகவல் வைரலாகி வருகிறது. அதில் மீரா சேரனை பற்றி தொடர்ந்து தவறாக பேசி வருவதால்மீராவை சந்திந்த சேரனின் மனைவி இது பற்றி பேசியுள்ளார். வழமை போல் மீரா தன்னிடம் சேரன் தவறாக நடந்துகொண்டதாகவும் தகாத முறையில் தொட்டதாகவும் பிக் பாஸ் வீட்டில் கூறியது போலவே கூறியுள்ளார்.
!Advert!
இதனால் கடுப்பான சேரனின் மனைவி மீராவின் கன்னத்தில் அறைந்ததுடன் இனி இப்படி பேசினால் பொலீஸில் புகார்கொடுக்கப் போவதாகவும் கூறிச் சென்றுள்ளார். இந்த செய்தி வைரலாகும் நிலையில் இதற்கு மீரா மறுப்பு தெரிவிக்காமல் இருக்கிறார். அப்படியானால் மீரா சேரனின் மனைவி அடிதடி உண்மை தான் என பலர் கூறி வருகின்றனர்..!!