நோக்கியா 8110 4ஜி பனானா மொபைல் தற்போது மார்க்கெட்டில்!
நோக்கியா என்பது அனைவராலும் விரும்பிக் கேட்கப்படுகின்ற ஒரு மொபைல் ப்ராண்ட் ஆகும். தொடர்ந்து பல்வேறு ஸ்மார்ட் தொலைபேசிகள் சந்தைக்கு வந்தாலும் நோக்கியாவிற்கான மார்க்கெட்டானது தற்போதும் இருக்கத்தான் செய்கிறது என்பதை நோக்கியா கம்பெனியானது மீண்டும் மீ்ண்டும் நிரூபித்துக் கொண்டுள்ளது.
தற்போது ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்தியாவில் நோக்கியா 8110 4ஜி மொபைல் போனினை அறிமுகம் செய்துள்ளது. இந்த மொபைல் போன் 2018 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய நோக்கியா மொபைலில் 2.4 இன்ச் QVGA வளைந்த டிஸ்ப்ளே, இன்ட்யூட்டிவ் டேக்டைல் மெக்கானிக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதை கொண்டு அழைப்புகளை ஏற்கவும், நிராகரிக்கும் ஸ்லைடரை பயன்படுத்தலாம்.
இந்த மொபைலில் 2.4 இன்ச் ஸ்க்ரீன் இருக்கிறது. 512 MB ரேம் மற்றும் 4 GB இன்டர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது. 2 MP கேமரா ஃபிளாஷ் வசதி இருப்பதால் ஒளி குறைவாக இருந்தால்கூட புகைப்படம் எடுக்க முடியும். கடந்த முறை 3310 மொபைலை அறிமுகப்படுத்தும்போதே அதில் 4G வசதி இல்லாதது பெரிய குறையாகப் பார்க்கப்பட்டது.
அத்தோடு இந்த மொபைலில் 4G வசதியைத் தந்திருக்கிறது. வைஃபை வசதி இருப்பது இன்னும் ஸ்பெஷல், மொபைலை 4G ஹாட்ஸ்பாட்டாகவும் பயன்படுத்திக்கொள்ள முடியும். 1500 mAh திறன் கொண்ட பேட்டரி இருக்கிறது. இதன் மூலம் 25 நாள்கள் ஸ்டான்ட் பை டைமை (Standby Time) பெற முடியும் என்று கூறுகிறது நோக்கியா.