“இவர்களை பார்த்தால் சிரிப்பு சிரிப்பா வருது” தற்போதைய இந்தியாவின் நிலை பற்றி ஓவியா போட்ட பதிவு.!! ஆதரவு தெரிவிக்கும் ரசிகர்கள்.!!
இந்தியாவில் தற்போது இருக்கும் நிலை தொடருமானால் இந்த வருட முடிவில் சுமார் 3 லட்சம் மக்கள் வரை மரணிக்கலாம் என சுகாதார துறை எச்சரித்துள்ள நிலையில் நாளொன்றுக்கு சுமார் 2 ஆயிரத்திற்கு அதிகமானோர் மரணமடைந்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக ஏராளமானவர்கள் இறந்து வருகின்றனர். இதனை தடுக்க அரசு முயற்சிகள் செய்யவில்லை, அத்துடன் கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு கட்டிலோ அல்லது சரியான மருத்துவ வசதியோ கிடைக்கவில்லை என பல குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளது.
குறிப்பாக பலரும் இந்திய பிரதமரையே குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் நடிகை ஓவியாவிடம் தற்போதைய நிலையில் பிரதமரின் செயற்பாடு பற்றி ஒரு வரியில் கருத்து சொல்லுங்கள் என ரசிகர் ஒருவர் கேட்டுள்ளார்.
அதற்கு ஓவியா “என்ன பண்றது சார் இவர்களை பார்த்தால் சிரிப்பு சிரிப்பாக வருகிறது” என கூறியுள்ளார். இந்த பதிவு வைரலாக பலரும் ஓவியா சரியாக தான் கூறியுள்ளார் என கூறி வருகின்றனர்.!!
— Oviyaa (@OviyaaSweetz) April 22, 2021