தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால் புகைத்தலுக்கு ( சிகரெட் ) அடிமையான நடிகை.! இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த் வெளியிட்ட தகவல்.!!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால் பிரபல நடிகை ஒருவர் புகைப்பிடிப்பதற்கு கற்றுக் கொண்டதாக பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த் அவர்கள் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த் எப்போதும் ஏதாவது ஒன்றை கூறி சர்ச்சையில் சிக்கிக் கொள்வது வழக்கமான ஒன்றாகும்.
அண்மையில் அவர் வெளியிட்டுள்ள பதிவும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது குறித்த பதிவில் நானும் பிக் பாஸ் மூலம் பிரபலமான நடிகை ஒருவரும் இவண்ட் ஒன்றுக்காக காரில் சென்றுகொண்டிருந்தோம். அதன் போது இடையில் டீ குடிப்பதற்கு வண்டியை நிறுத்தினேன், ஆனால் குறித்த நடிகை டீ குடிப்பதில்லை என்று விட்டு சார் நான் கொஞ்சம் வெளியே சென்று வருகிறேன் என்றார். முதலில் எனக்கு புரியாத போதும் பின்னர் சரி போய் வாருங்கள் என்றேன்.
வந்தவர் சிகரெட் பெட்டியை கொண்டு வந்து அவரது கை பையில் போட்டுவிட்டு சாரி சார் என்றார். நான் இதில் என்ன இருக்கிறது தற்போது சாதாரண விடயம் என்றேன். அவரோ இல்லை சார் நான் புகைப்பது யாருக்கும் தெரியாது, குடும்பத்தில் உள்ளவர்கள் இதனை தெரிந்தால் அவ்வளவு தான் என்றார். அப்படியா புதிதாக பழகினீயா என கேட்டேன் அதற்கு ஆமாம் சார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற போது பழகிவிட்டேன். அங்கு சென்றால் எல்லோரும் ஏதாவது கெட்ட பழக்கம் பழகிவிடுவார்கள். அங்கு அவர்கள் கொடுக்கும் டென்சனில் பைத்தியம் பிடித்துவிடும். அந்த டென்சனை குறைப்பதற்காக சிகரெட் எடுத்தது, பழகிவிட்டது. என்றார். அது மட்டும் அல்ல பிக் பாஸ் வீட்டில் இருந்த ஒவ்வொருவரும் ஏதாவது ஒன்றில் அடிமையாகவே இருப்பார்கள், காதல் அல்லது போதை இது இல்லாமல் அங்கு இருக்கவே முடியாது என கூறினார்.
இதை கேட்டதும் அதிர்ந்து போனேன், பின்னர் அவருடன் பயணத்தை தொடர்ந்தேன், வெளியே பெயரை சொல்ல வேண்டாம் என்றதால் சொல்லவில்லை என கூறினார் என ஜேம்ஸ் வசந்த் கூறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் நாம் ஓரளவு புரிந்துகொண்டோம் யார் என்று என கூறியுள்ளார்.!!