இரண்டு வருட பகையை மறந்து மீண்டும் இணையும் எஸ்பிபி & இசைஞானி..! எப்போது தெரியுமா பாருங்கள்..!
எஸ் பி பி, இளையராஜா இரு பெரும் இமையங்கள். இன்று வெவ்வேறு திசையில் பயணித்துக் கொண்டிருப்பது பலரது மனதை காயப் பட்டுக் கொண்டிருகின்றது. இளையராஜாவின் இசையில் மட்டும் 2000திற்கு மேற்பட்ட பாடல்களை பாடியவர் பாடும் நிலா எஸ் பி பாலசுப்பிரமணியம்.
அன்று இணைபிரியா சகோதர்கள் என புகழப் பட்ட இந்த ஜோடிக்கு யாருடைய கண் பட்டதோ கொபி ரைட்ஸ் என்ற ஒரு பிரச்சனையால் பிரிந்து போனார்கள். இவர்கள் இனி இணையவே மாட்டார்களா என ஏங்கிய ரசிகர்களுக்கு ஒரு நிம்மதியான ஏக்கம் தீர்க்கும் செய்தி கிடைத்துள்ளது.
அதாவது 2 ஆண்டுகால பகையை மறந்து இருவரும் இணையப் போகிறார்களாம். வரும் ஜூன் இரண்டு இந்த மகிழ்ச்சியான தருணம் நிகழுமாம். இசைஞானியும் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை ஈவிபி அரங்கில் பிரமாண்டமான இசை நிகழ்ச்சி நடக்க இருக்கிறதாம்.
இதில் இசைஞானியுடன் இது வரை காலமும் பயனித்த அத்தனை பேரும் கலந்துகொள்கின்றனராம். இந்த மேடையில் இசைஞானியும் எஸ்பிபி யும் இணையப் போகின்றனராம். ஜூன் 2ம் திகதி வரை பலரும் காத்திருப்பது இசை ஜாம்பவான்கள் மீண்டும் இணையும் அந்த தருணத்திற்காக தான்..!