பாண்டியண் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து பாக்கியலக்ஷ்மி சீரியலுக்கு மாறிய பிரபல நடிகை.! இந்த மாற்றம் ஏன் என கேட்கும் ரசிகர்கள்.!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து நடிகை ஷீலா தற்போது பாக்கியலக்ஷ்மி சீரியலுக்கு வந்துள்ளார். பிரபல தொலைகாட்சியில் ஒளிப்பரப்பாகும் பாக்கியலக்ஷ்மி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டு சீரியல்களுமே ரசிகர்களின் மனம் கவர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான்.
இதில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பாண்டியன் ஸ்டோர்ஸ் சகோதரர்களின் தாயாக நடித்த ஷீலா இறப்பது போல் காட்சிகள் அமைக்கப் பட்டது. சீரியலில் ஷீலா நடித்த லக்ஷ்மி அம்மா கதாபாத்திரம் இறந்த பின்னர் தற்போது பாக்கியலக்ஷ்மி சீரியலில் களமிறங்கியுள்ளார் நடிகை ஷீலா.
கோபியின் கள்ளக் காதலியாக இருக்கும் ராதிகா கதாபாத்திரத்தில் நடிக்கும் ரேஷ்மாவின் அம்மாவாக ஷீலா நடிக்கிறார். இதனை வைத்து பார்க்கும் போது பிரபல தொலைக்காட்சியுடன் இருந்த பிரச்சினைகள் நடிகை ஷீலாவிற்கு முடிந்து விட்டதாகவே தோன்றுகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருக்க வேண்டிய கதாபாத்திரத்தை ஷீலாவின் மகனான விக்ராந்த் மேல் உள்ள கோபத்தால் வீணாக சாகடித்ததாக கூறப்பட்டது, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அழைத்த போது மறுப்பு தெரிவித்து விட்டு சர்வைவர் நிகழ்ச்சியில் விக்ராந்த் கலந்து கொண்டதே காரணம் என கூறப்பட்டது, இப்போது அந்த கோபம் குறைந்துவிட்டது போல் பொறுத்து இருந்து பார்க்கலாம்..!