கொரோனாவில் இருந்து மக்களை மீட்க நடிகர் பார்த்தீபன் அரசுக்கு கொடுத்த ஆலோசனை..! குவியும் மக்களின் ஆதரவு….கண்டுகொள்ளுமா அரசு.?
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்தவர் பார்த்தீபன், இயக்குனர், நடிகர், கதாசிரியர், என பல திறமைகளுக்கு சொந்தக்காரரான பார்த்தீபன் அண்மையில் தனது திரைப்படத்திற்கு அங்கீகாரம் கொடுக்கிறார்கள் இல்லை என பதிவிட்டிருந்தார். இதற்கு ரசிகர்களும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் தற்போது வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸில் இருந்து மீள்வது தொடர்பான அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார். இதற்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இதில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்து விட்டது இதில் இருந்து விடுபட அனைவரும் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
புதிய பரிசோதனை நிலையங்கள் தனிமை படுத்தல் நிலையங்கள் தேவைப்படும் பட்சத்தில் அதிக பில்டிங் வைத்திருப்போம் வாடகை இன்றி அரசுக்கு கொடுத்து உதவலாம் என்னிடம் பில்டிங் உள்ளது நானும் கொடுக்க தயாராக இருக்கிறேன், அத்துடன் கிராமங்கள், நகரங்கள் அனைத்து இடங்களிலும் உள்ள சாலை அருகில் சிறிய அளவிலான மருத்துவமனைகள் திறக்க வேண்டும்.
தனிமை படுத்தலுக்கு தேவைபடாத போதும் மருத்துவ மனைகளுக்கு எமது பில்டிங்களை அரசு பயன் படுத்தலாம். இப்படி செய்தால் மக்களுக்கு அறிகுறிகள் தெரியும் போது மருத்துவ மனைக்கு வந்து விடுவார்கள். இதன் மூலம் கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க முடியும்.
இது எந்த அளவிற்கு சரி வரும் என்று தெரியவில்லை ஆனால் அருகில் மருத்துவ மனைகள் இருந்தால் மக்கள் சற்று எச்சரிக்கையாக இருப்பார்கள் என கூறி உள்ளார். இதற்கு ரசிகர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்…!!
இயன்றதை செய்வோம்! https://t.co/BQv5mVgAIK
— Radhakrishnan Parthiban (@rparthiepan) March 24, 2020