வீட்டில் இருக்கும் நேரத்தில் பெண்கள் பணம் சம்பாதிக்கலாம்…இதனை செய்யுங்கள்…! நடிகர் பார்த்தீபனின் முன்னாள் மனைவி சீதா பெண்களுக்கு கொடுத்த ஐடியா..!!
நடிகர் பார்த்தீபனை காதலித்து திருமணம் செய்தவர் நடிகை சீதா. பார்த்தீபன் இயக்குனர், நடிகர், எழுத்தாளர் என மக்கள் மத்தியில் பிரபலமானவர். சீதா அன்றைய முன்னணி நடிகையாக இருந்தவர். இருவருக்கும் இடையில் காதல் மலர திருமணம் வரை சென்றது.
இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் 1 ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். சீதா சீரியல் நடிகர் ஒருவருடன் லிவிங் டுகெதர் வாழ்ந்து வந்த நிலையில் குறித்த நபர் சீதாவின் பணத்தை சுருட்ட ஆரம்பித்தார்.
இதனை உணர்ந்த சீதா பின் தன் தாயுடன் போய் சேர்ந்துகொண்டார். பார்த்தீபன் தனது மகள்களை வளர்த்ததுடன் திருமணமும் செய்து வைத்தார். இந்த நிலையில் சீதா பற்றிய செய்திகள் வெளியாகி உள்ளது. சீரியல்களில் நடித்து வந்த சீதா தற்போது தாயுடன் வீட்டு தோட்டம் செய்ய ஆரம்பித்துள்ளார்.
சுய வேலை என்னும் பெயரில் வீட்டில் இருந்தபடி பெண்கள் சம்பாதிக்க காய்கறி தோட்டம் செய்வது பற்றி சொல்லி கொடுத்து வருகிறார். தற்போது 144 தடை சட்டத்தால் வீட்டில் இருக்கும் நேரத்தில் வீட்டில் இருந்து பெண்கள் இவற்றை செய்யுங்கள் என கூறி கத்தரி, தக்காளி, மிளகாய் போன்ற செடிகள் நாட்டும் முறையை சொல்லிக் கொடுத்து வருகிறார். நல்ல விடயம் தான் வழ்த்துக்கள் சீதா..!!