பெண்ணுக்கு பருவ மாற்றத்தின் போது மார்பகம் வலிக்க ஆரம்பித்து இறுதி வரை அவளை இத்தனை வலிகள் வதைக்கிறதா!?தயவு செய்து படியுங்கள் பகிருங்கள்..!
“பெண்கள்” சாதாரணமானவர்கள் தான். ஆண்களுக்கு தான் அதிகம் பலம் வேண்டும் அறியாத வயதில் இருந்தே அம்மா பாட்டி என அனைவரும் வீட்டில் உள்ள ஆண்களுக்கு ஆதரவு குரல் எழுப்பிக் கொண்டிருப்பார்கள். தட்டில் பகிரும் சாப்பாட்டில் ஆண்களின் பங்கு தான் அதிகமாக இருக்கும் பொட்ட கழுத வீட்டில் தானே இருக்க போற என்பதாகவே பல பெண் குழந்தைகளின் கேள்விகளுக்கு பதில் வரும்.
எப்போதும் ஆண்கள் மட்டுமே அதிக கஷ்டத்தை அனுபவிப்பார்கள் என்பது பெரியவர்களின் எண்ணம்.ஆனால் ஆண்களை விட அவர்கள் அனுபவித்திருப்பார்கள் அதை அவர்கள் மறந்திருப்பார்கள்.ஒரு நிமிடம் பெண்ணை பற்றி சிந்தியுங்கள் உணர தொடங்கி விடுவீர்கள்..! அறியாத வயதில் எதுவும் இல்லை ஆனந்தம் மட்டும் தான்.. ஆனால் 10 வயது முடியும் போது பருவ மாற்றங்கள் தொடங்குகிறது.
சிறிதாக இருக்கும் மார்பு பகுதியில் வலிக்கும்.. வீட்டில் சொன்னால் அது அப்பிடி தான் என்பார்கள்.. இந்த வலி அதிகமாகும் ஆனால் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் காரணம் அது இயற்கை. அதன் பின் பெண்களுக்கு எது ஆனாலும் அது இயற்கை தான்… ஆடி பாடி விளையாடும் போது அடி வயிற்றில் இடி போல் ஒரு வலி சரி பவருவமடைந்து விட்டோம். அந்த 15 நட்கள் மட்டும் அதிகமாய் கவனிக்கப் படுவோம்.
அதன் பின் ஒவ்வொரு மாதமும் உயிர் போய் வரும் வலி. சிறிய உள்ளாடைக்கே நாணம் வரும் ஆனால் சிறு பிள்ளைக்கு போல் உதிரம் வெளியேறாமல் ஒரு சுமை. இது இயற்கை ஆனால் அதுவும் வலிக்கும் என்பது பலருக்கு தெரியாது. பாடசாலை அல்லது வெளியே வேலைக்கு செல்லும் பெண்களால் அடிக்கடி மாற்றிக் கொள்ள முடியாது..அதன் போது ஏற்படும் அரிச்சல் அப்பப்பா அனுபவ பட்டவர்களிடம் கேட்டுப் பாருங்கள் அதனால் எத்தனை நாள் உணவை தவிர்த்திருப்போம் என்று.
அதன் பின் திருமணம்.. எதுவுமே அறியாத பெண்ணுடல் ஒருவரின் முரட்டு தனமான உடல் உறுப்பை ஏற்றுக் கொள்கிறது. பெண்ணுக்கும் ஆனந்தம் இருக்கிறது தான் ஆனால் வலி அதிகம் இருக்கிறது.. எத்தனை முறை என்றாலும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். பிடித்து சில முறையும் பிடிக்காமல் சில முறையும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அடுத்து குழந்தை இதென்ன பெரிய விடயம்..!? 10மாதங்கள் முழுமை அடையாமல் குழந்தை வந்துவிடுகிறது தான்.ஆனால் அந்த 10 மாதத்தின் வலிகளை என்னால் நிச்சயம் எழுத்திற்குள் அடக்க முடியாது!? இத்தனை துன்பம் அனுபவிக்கும் பெண்ணுக்கு தான் பலம் வேண்டும்.