பிரியங்காவை வெளியேற்ற திட்டமிடும் போட்டியாளர்! பிரிவால் கதறி அழுத பிரியங்கா.!
பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது, போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் டைட்டிலை நோக்கி பயணம் செய்ய ஆரம்பித்துள்ளனர். பிக் பாஸ் வீட்டிற்குள் அப்பாவியாக வந்த தாமரை தற்போது ஆட்சி செய்ய ஆரம்பித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே என்ன என்று தெரியாது என கூறி வந்த தாமரை தற்போது அனைத்து போட்டியாளர்களையும் அசல்ட்டாக பின் தள்ளி முன்னேறி வருகின்றார்.
யாரை வெளியேற்றினால் தனக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதை உணர்ந்து பலம் மிக்க போட்டியாளர்களுடன் நட்புடன் பழகி பின்னர் சண்டையிடுகிறார். நதியா ஆரம்பித்து ஸ்ருதி, மது, சின்ன பொண்ணு என அனைவரையும் அனுப்பினார்.
தற்போது பிரியங்காவிடம் போராட்டம் நடத்தி வருகிறார். தாமரையின் அடுத்த இலக்கு பிரியங்கா தான் என்பது தெளிவாக தெரிகிறது. இந்த நிலையில் வெளியே அனைவராலும் கொண்டாடப் பட்ட பிரியங்கா பலரது கேலி கிண்டலுக்கு ஆளாகி உள்ளார்.
அபிஷேக்கும் பிரியங்காவை தூண்டி விட்டார். நேற்றைய எபிசோட்டில் அபிஷேக் மிகக் குறைவான வாக்குகளை பெற்று வெளியேறினார். அபிஷேக் தனக்கு நல்லது செய்வதாக நம்பிக் கொண்டிருந்த பிரியங்கா கதறி அழுதார். பலரது ஆதரவை பெற்றிருந்த பிரியங்கா தற்போது பலரது கேலிக்கு ஆளாகி இருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. !