இரட்டை குழந்தைகளின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை நிறுத்திய பிரஜன் சாண்ட்ரா தம்பதி..! கொரோனா வைரஸினால் ஏற்பட்ட மாற்றம்..!!
சினிமா, சீரியல் என நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சாண்ட்ரா . தொகுப்பாளராக அறிமுகமான இவர் சீரியல்களில் நடித்து பின் சினிமாவில் நடித்தார். பிரபல தொகுப்பாளர், சீரியல் நடிகர் பிரஜனை திருமணம் செய்தார்.
இரு வீட்டிலும் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தனியாக வாடகை வீட்டில் வாழ்ந்து தங்களுக்கு தேவையானவற்றை தேடிக் கொண்ட பின் சாண்ட் ரா கர்ப்பமனார். இவர்களுக்கு கடந்த வருடம் ஏப்ரல் மாதம் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தனர்.
இந்த மாதம் பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில் கொரோனா வைரஸ் இந்தியா முழுவதும் பரவ ஆரம்பித்தது. இதனால் பிறந்த நாள் கொண்டாட்டத்தை நிறுத்திவிட்டு அதில் மற்றவர்களுக்கு உதவ நினைத்துள்ளனராம் பிரஜன் சாண்ட் ரா தம்பதி..! இதனால் ரசிகர்கள் இவர்களை பாராட்டி வருகின்றனர்..!!